புலவர் என்.வி. கலைமணி
163
இப்போது - ஊரே பெருக்கெடுத்தோடுகிறது! எங்கும் வெள்ளக்காடு அலை பரப்பி ஓடை வடிவெடுத்து, கால்வாய் வழியாக ஓடுகிறது - வெள்ளம்!
அந்த வெள்ளப் பெருக்கின் மீது, மேலும் மழைத் துளிகள் விழுந்துகொண்டே இருக்கின்றன!
ஜலதரங்க ஓசை! தண்ணிர்க் கொப்பளங்களாகத் தோன்றிச் சிரிக்கின்றன!
அக்கொப்பளங்கள் மீது வான் துளிகள் வீழ்ந்து உடைந்து, நீரோடு நீராகக் கலக்கின்றன!
தப்பித்தது ஒரு குமிழி! சுழற் பெருக்கோடு, ஓடையிலே குமிழி மிதந்து செல்கிறது!
தமிழன்னையே! தாயே! மலர்த்தேன் குட்டையிலே குளித்தெழுந்து வந்தவளே - நீ வாழ்க!
எத்தனையோ படைப்புக்களைப் படைத்த நீ உனது கைக்குக் கிடைத்தவன் நானா?
என்னைக் குமிழியாகப் படைத்தவளே! நீரின் மீது ஓடமாக ஓட்டி விட்டவளே!
தாய்ப் பாசம் என்னைத் தள்ள, உன் மடியை நோக்கி வரவேண்டிய என்னைக், கற்களிலே மோதி உடையவா படைத்தாய்?
எனது தோற்றத்தால், நீ பெறுகின்ற மகிழ்ச்சிதான் என்னம்மா?
அலையின் அழகில் ஆனந்தக் கூத்தாடும் தென்றல் தேரை, நீ ஓட்டி வந்த நாளில் - உனது தேரூறும் பாதையெலாம் நான் மணலாக இருந்தேன்!
அருள் பெற்ற காரணத்தால், எனக்க நீ அருளிய உருவம், குமிழியா அம்மா!