பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

167



என் உடலின் மீதிருக்கும் வண்ணத்தைப் பார்த்து - நீ ரசிக்கிறாயா அம்மா!

அவற்றை நீ தானே, துரிகையால் தொட்டு எழுதினாய்?

அளவிட முடியாத உயரத்தைக் காட்டுகின்ற வண்ணம் - நீலம்.

அந்த நீலத்திற்கு, நீ கொடுத்த விமரிசனம் - 'திருக்குறள்' அல்லவா?

அதனால், என் உடல் முழுவதும் எழுதி வரைந்தாய்!

அதன் ரசனையில் நீ இருக்கும் போதே, நான் கீழ் - மேலாகவே, வாழ்க்கையை மாற்றிச் செல்கிறேனே!

தாயே! தர்மத்தின் திக்கில் இருப்பவளே! நீதியின் நிழலை விரவும் தருவே!

உனது கம்பீரமான தோற்றத்தை, நான் போகின்ற ஆற்றின் பாதையில், கண்டேன்! மெய்சிலிர்த்தேன்!

என் ஜீவயாழ், உன்னைப் பாடிக் கொண்டே செல்கின்றது!

அந்தப் பாட்டு...! உன் இலட்சியத்தின் மீது கட்டப்பட்டது!

விடுமுறை நாட்களில் ஓய்வு பெற வந்த சிறுவர்கள், என் அழகைப் பார்த்துச் சிரிக்கின்றனர்!

ஒரு தீராத விளையாட்டுப் பையன், தன் காகிதக் கப்பலை - என் மீது மோதினான்!

நான், கப்பலோடு சேர்ந்த வண்ணமாய் சோகமாகச் செல்கின்றேன்.

சிறுவர்களுக்கு எத்தனை மகிழ்ச்சி! அதே நேரத்தில் எனக்கு எத்தனை அதிர்ச்சி! அப்போது ஒரு கவிஞன் இருந்தால் அது தானே கவர்ச்சி!

உன் அறிவின் ஆழம்போல, ஓர் ஆழமான இடத்தில் நான் மீண்டும் தலைக் குப்புற விழுந்தேன்!

என்னுடன் வந்தக் காகிதக் கப்பலும் கவிழ்ந்தது!

அதன் மீது எழுதப்பட்ட எழுத்துக்கள் - நீரால் கரைந்தன.