இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொடுவான் என்பது, பூமியின் மேல் உதடு!
தொடாதவான் - தொடுவானாக மாறுகிறது.
அண்ணாவின் முழுமையை யாரும் தொட்டது கிடையாது!
ஆனால், தொடுவான் பூமியைத் தொடுவது போல் தெரியும்!
அது கண்ணுக்கு மாயை அல்ல - கருத்துக்கு மாயை!
அண்ணா கண்ணுக்கு மாயை அல்ல! கருத்திலே அவர் ஒரு புதிர்! - தொடுவான், மின்னல் விளையாடும் திரை!
அண்ணா, எண்ணத்தை விளையாட வைக்கும் இறை!
அந்தி நேரத்தில், தொடுவானில் ஒரு பறவை பாடிக் கொண்டே செல்வதைக் கேட்டேன்.
அதன் சிறகுகளிலே பொருந்தியிருக்கும் இறகுகள் சொர்ணத்தாலானவை.
கூட்டை நோக்கி அது செல்கிறது.
குஞ்சுகள் கூட்டிலே இருந்து தாய்க்காகக் காத்துக் கிடக்கின்றன!
தொடுவான், வீடு திரும்பும் பறவைகளைத் தினந்தோறும் பார்க்கிறது.