பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

181



தொடுவான் இதையும் பார்க்கிறது.

கீழே இருந்த பூண்டுச் செடியால் மேலே போக முடியவில்லை.

மேலே இருந்த ராஜாளியோ - பருந்தோ - கீழே வர முடியவில்லை.

தொடுவான் - பூண்டுக்கு மங்கிய ஒளியில் சிறுசிறு எறும்புகளை - அதன் பக்கத்திலிருக்கும் புற்றுகளைத் - தெளிவாகக் காட்டுகிறது.

மேலே இருக்கின்ற பருந்துக்கு கீழே, இயற்கை காட்டும் இரகசியம் புரியவில்லை.

அண்ணா, மேலே இருப்பவர்களுக்கு இரகசியங்களைக் கூறியதில்லை.

கீழே, புல்லாக - பூண்டாகக் கிடப்பவர்களுக்கு, நுணுக்கமான விஷயங்களை அறிவித்தவர்.

தொடுவானம், கடலின் மேல் கவிந்திருக்கும் போது, நீரே பொங்கி, மேலே இருந்து வழிவது போலத் தெரியும்.

ஆழமான அறிவிருப்பவர்களுக்கு, மேலே இருந்து அண்ணா வழிவதைப்போலத் தோன்றுவார்.

உயரமான ஒரு கொடிக் கம்பத்தின் மீது ஏறி நின்று, தொடு வானைப் பார்க்கும் போது, நிலத்திற்கும் தொடுவானத்திற்கும் மையத்தில், ஒரு கரிய கோடு ஒடும்.

அந்த இருள், இதுவரையிலும் உலகம் சந்திக்காத இருள். அந்த இருளுக்கு மேல், இதுவரை சந்திக்காத ஒரு வெள்ளி ரேகை இருப்பதையும் பார்க்கலாம்.

இது எதனால் வந்தது - என்று, விஞ்ஞானியும் விளக்க வில்லை - மெய்ஞானியும் கூறவில்லை.

நான் நினைக்கிறேன், அந்த இருள்தான் மூடநம்பிக்கைத், தலையை அழுத்துகின்ற அண்ணாவாகும்.

வறண்டுபோன ஒர் ஆறு! அதன்மீது தொடுவானத்தைப் பார்த்தேன்.