பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



கூடற்கு இனிய குறிக்கோள்கள் குறித்து வைக்கும் - தேடற்கு இனிய சீரளிக்கும் செம்மலே!

நீ உன்னை ஊற்றி வளர்கின்ற இடத்தைக் கொள்கை எடுப்பென்பார்.

தேன் ஊற்றி வளர்க்கின்ற இடத்தைப் பூவென்பார்.

வான் ஊற்றி வளர்க்கின்ற ஒன்றை மழை என்பார்.

நான் ஊற்றிப் பாடுகின்ற இப்புகழைத் திக்கே. திசையே, முன்னே, பின்னே, நடுவே. அண்டத்தின் வளைவே, அகிலாண்ட விரிவே, ஊழிக்கு உறைபோட்ட ஊழியே. வெளியே உயிரணுக்கள் இருக்கின்ற இடமெல்லாம் போய் இதனைச் சொல்லாயோ!

துயருக்குத் தொடுக்கின்ற புகழ் மாலை.

மாலையிலுள்ள பூக்களை வண்டினங்கள் வாய்வைத்து உறிஞ்சி எச்சில் படுத்தவில்லை.

புத்தம் புதிய பூக்கள் பொழுதுக்கே பூத்த பூக்கள் - சத்துடைய ஒருவனுக்கு சாற்ற வந்த பூக்கள்

நிலாச் சொறிந்த வெள்ளிப்பூ!

ஓடும் மின்னற் கொடியில் - உதிர்ந்த பிழம்பொளிப்பூ! நல்ல பூ!

இப்பூக்கள், அண்ணா என்னும் என் இரு கண்களுக்கு இட்டப் பூக்கள்.

வீனுக்குத் தலை வைத்து - வெறுப்புக்கு வழி வைத்து, மானிடராய்த் திரிபவர்கள் ஓதிய மரங்கள்!

ஓங்காரத் தமிழ் மொழியின் பயனை - ஓர்ந்தோர்ந்து - ஆங்கார அடுப்பவித்து - பாங்கான பண்பெனும் விளக்கேற்றி -

தீங்குக்கு உளம் நடுங்கும் தித்திக்கும் மனமுடையோர் வரிசை தன்னில் - ஓவியமாய் - காவியமாய் - ஜீவியமாய் இருப்பவரே - அறிஞர் குல அரசரே!