40
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
எழுத்தை நினைக்கும்போது ஓர் அறிஞனுடைய நினைவு வருகிறது.
பேச்சு, ஓவியம், இசை இவற்றை நினைக்கும்போது ஒவ்வொருவருடைய நினைவும் நமக்குத் தோன்றுகிறது.
ஞாபகம் என்பது காலத்தின் வேராகும். அன்னாவை நினைக்கும்போது எது நினைவிற்கு வருகிறது?
பேச்சா? எழுத்தா? நாடகமா? உரையாடலா? அன்பா? பண்பா? அரசியலா? அவரது அழகான தமிழா? அற்புதமான ஆங்கிலமா?
எல்லாத் துறையிலும் ஒரு மனிதனை நினைக்கிற நேரத்தில், நமக்கு இப்படி ஞாபகம் வருகிறதென்றால் இதற்கு பெயர்தான் என்ன?
சர்வ வல்லமையா?
சர்வ வல்லமை என்பது இறைவனுக்குத்தான் பொருந்தும் என்று, "எண்குண ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்களே என்று கேட்டால், முழு மனிதன் இறைவனை விட்டுக் குறையனாகவா பிறந்தான்?
இறைந்து இருப்பவன் இறைவனென்றால், எல்லா வல்லமையிலும் இறவாது இறைந்திருப்பவன் அறிஞன் என்று, வேதாகமம் கூறுகிறதே!
இந்த இடத்தில்தான், காலம் எப்படி அண்ணாவால் தன்னை, மகுடம் சூட்டிக் கொண்டிருக்கிறது என்றும்,
அண்ணாவும், காலத்தால் எப்படிக் கவனிக்கப்படுகிறார் என்பதையும் சிந்திக்க வேண்டும்.
செத்துப்போகும் -நினைவாற்றல், மனித சமுதாயத்திற்கு இருக்கும் வரையில் அவர் என்றும் வாழ்கின்றார்.
"கரைந்து வருகின்ற நிலவுக்கொரு கவிஞன்" என்று ஓர் அறிஞன் கூறுகிறான்.