இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. அண்ணா ஒரு நீர்வீழ்ச்சி!
நீங்கள் அவனைப் பார்த்தீரோ,
அவன் ஒரு நீர்வீழ்ச்சி,
அது ஒரு நீர்த்துளி,
தெய்வத்தின் ஈரத்தால் நெய்யப்பட்டது,
அதன் இழைகள், காலத்தை வெல்லும் பண்பாடுடையன,
நீர்வீழ்ச்சிக்கு மறுபெயர் அண்ணா.
அதோ அது; தாயகத்தின் மடிமீது விழுகிறது,
அதனுடைய சிதறலில், ஒளி போர் செய்கிறது!
இப்போது துளிகள் அத்தனையும் - வண்ணச் சொட்டுகள்,
நீருக்கு வேரில்லை! அது நகர்ந்து வந்த திக்கு, யாருக்கும் தெரியாது!
ஞானி, அதன் முடிவை சிந்திக்கிறான்!
அது மேலே இருக்கும்போது - பலத்தோடு வழிகிறது.
நில இதயத்தில் அது விழும்போது, பூ போல மென்மையாகிறது.
அதற்கு விரோதமாக எந்தப் பூக்களும் பூத்ததில்லை,
நீர்வீழ்ச்சி ஜீவராசிகளின் தாய்,