பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

49



அது ஊறிய மண்ணில் எத்துணை குளுமை,

ஏழையின் கண்ணிலிருக்கின்ற இரக்கத்தையும் - தமிழ் மொழியிலிருக்கின்ற ஈரத்தையும் - நீர்வீழ்ச்சி; வென்று விடுகிறது,

பள்ளத்தாக்கில் அது விழுந்தாலும் - கடலுக்குக் குழந்தையாகி விடுகிறது,

கயவர்களும் அதைக் குடித்துத் தாகம் தீர்த்துக் கொண்டனர் - ஆனால், வென்றதில்லை.

மன ஊருக்குப் பக்கத்தில் - அது நீண்ட காலமாக விழுந்து கொண்டிருக்கிறது.

அது வற்றிவிடாதோ என்று, கோடைக்கால நெஞ்சங்கள் எதிர்ப்பார்த்தன.

அதுவா வற்றும்? எப்போது வானம் கண்ணைத் திறந்ததோ - அப்போதே அது மண்ணைத் தொட்டது.

தீர்த்தமென்று அதைத் தெய்வீகன் கூறுகிறான்.

திருத்தும் என்று பகுத்தறிவுவாதி கூறுகிறான்.

அறிவு மலையிலிருந்து விழுவது நீர்வீழ்ச்சி,

அதனுடைய இரைச்சல், எல்லா தேசத்தையும் செவிமடுக்கச் செய்தது.

வெட்கப்பட்ட நாடு வணங்கிக் கேட்டது.

ரோஷமற்றவன் காலைக் கழுவினான்.

அதோ அது; அவன் காலிலே நெருப்பாக இல்லை.

- நிலவாகக் குளிர்கிறது.

★ ★ ★

கர்வியை ஒரு நாள் -சந்தித்தது நீர்வீழ்ச்சி,

நீ, நீர்தானே என்று, கர்வி கேட்டான்.

ஆம், என்றது நீர்வீழ்ச்சி,