பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி




கீழே விழுத்தவுடன் சிதறுகின்ற உனக்கு - மனிதன் மரியாதை கொடுத்தது தப்பு: என்று கேட்டான்.

நீர்வீழ்ச்சி பேசுகிறது:

நான் விழுந்தாலும் சிதறுகிறேன் - ஆனால் பதறவில்லை.

எவ்வளவு சிதறினாலும் மறுபடியும் மண்ணிலேயே ஒட்டிக் கொள்கிறேன்.

மண்ணுக்கும் எனக்கும் நீங்காத தொடர்பு.

எனது தலை பாரமாக இல்லை - அதனால், எனக்கு எப்போதும் மண்டை உடைவதில்லை.

கர்வியும் என்னை நீர் என்று, மரியாதையோடுதான் கூறுகிறான்.

காரணம் தெரியுமா? அவன் பினத்தைக் கடைசியில் கழுவுகிறவன் நான்.

கேள்வி கேட்ட கர்விக்குத் தாகம் எடுத்தது.

குறிப்பால் உணர்ந்த நீர்வீழ்ச்சி, 'என்னை'க் குடி என்றது.

அண்ணாவைக் குடித்தவன் தாகம் தணிக்கப்படுகிறான்.

அவனது களைப்பு தீர்க்கப்படுகிறது.

கரைகளற்ற நீர்வீழ்ச்சி கறைகளற்ற நீர்வீழ்ச்சி!

அது ஒரு நீர்த் தொங்கல்! தண்ணிர் விழுதுகள்! ஜலத்திரை!

விழும்போது அதற்கு அலைச் சுருக்கங்கள் இல்லை.

மனிதன் விழுந்தால்;எவ்வளவு சுருக்கங்கள் - முகத்தில்!

அதோ, நீர்வீழ்ச்சியின் பக்கம் - மந்தைகள் மேய்கின்றன,

அந்த சின்ன ஆட்டுக் குட்டிக்குக் கத்தக் கூடத் தெரியவில்லை.

பெரிய கடாவுக்கு அதனுடைய மழலை புரியவில்லை.

கத்தாதே என்று வளர்ந்த கடா கேட்கிறது.