புலவர் என்.வி. கலைமணி
61
வாடிய மலருக்கு வாழ்வென்பது எது? வதங்குமா மலர்?
சிந்தித்தான் சித்தார்த்தன். முடிவு காண முனைந்தான்.
'போதி’யின் கீழே அமர்ந்தான். 'புத்தொளி' பிறந்தது. ஞானம் படர்ந்தது.
ஆசையின் அழுக்கு - இழுக்குகள்; அவனுக்குத் தெளிவாகத் தெரிந்தன.
சித்தார்த்தன் புத்தனானான்!
நான் மலர்! உயிரில் மிகச் சிறிய உயிர்!
கபிலவாஸ்துவின் காவல்னெங்கே? கருகிய மலரான நானெங்கே?
முடிவென்ன தெரியுமா? ஒரு மலர் மன்னன் மனதையே மாற்றிவிட்டது.
மாயை, மனதை மாற்றுமா? தெளிவைக் கொடுக்குமா? சித்தார்த்தனிடம் செல்வானேன்.
தென்னகத்தின் பேரறிஞரைக் கவனி. அமைதிக்கு அடைக்கலம் தந்து - அரசியலுக்குப் புத்துருவம் அளித்தவர்.
பொன்னாகப் பொதுவாழ்வைப் பொலிவுபடுத்தியவர்:
தன்னகத்தே கொண்டிருக்கிறார்; தன்னாலாக்கப்பட்ட எழிற்கொள்கைகளை.
அறிஞர் அண்ணாவின் தம்பிகளிடையே சென்று, உனது அண்ணன் ஒரு மாயை என்று அறைந்து பார்.
அறிவு வாதத்தில் அடியற்ற மரம் போல நீ வீழ்கிறாயா இல்லையா என்று பார்; என்றது அந்த ஊதா மலர்.
ஊரறிய உரைத்த ஊதா மலரின் தத்துவச் சிந்தனைகளை; தூர இருந்து மற்றொரு மலர் உற்றுக் கேட்டது.
செந்தூர மலர்தான் அது. விடுமா அவனை? 'என்னே தம்பி’ என்று பேசிடத் துவங்கியது.
ஊதா மலரைக் கண்டு - செந்தார மலர் - விலா நோகச் சிரித்தது!