இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5
கின்றதாம், அதனால் உலகமும் பெருமையை அடைகிறதாம்! அழிந்து விட்டால் இந்தப் பெருமை, புகழ், உலகுக்கு ஏற்படாதல்லவா?
அதனால்தான் இந்த உலகம், அறிவுக்கொடைகளாக ஒவ்வொரு துறையிலும் ஞானிகளை உருவாக்குகின்றது என்பதற்கு, அறிஞர் அண்ணா அவர்கள் ஓர் எடுத்துக்காட்டாக - அவரது ஞானத்திற்கு, பண்புக்கு, தொண்டுக்கு, புகழுக்கு, நிலையாமை மிகுதியினை வென்று, அழியாத ஞான சக்தியாக நிற்கின்றார்.
“சாம்போது அண்ணா புகழ்பாடிச் சாகவேண்டும் - என்
சாம்பலும் அவர் புகழ் மணந்து வேக வேண்டும்”
என்பதே எனது எண்ணமாகும். அதன் சிறு அணுவே இந்த எனது ‘அறிஞர் அண்ணா நினைவஞ்சலி’ யாகும்.
என்.வி. கலைமணி