பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி



சாதாரண மாதவிக்கொடி, தனது நிறத்தால், சாகாவரம் பெற்ற தமிழ் இலக்கியமாகி, உலக இலக்கியமாக உருவடைந்தது!

மாதவிக் கொடியின் இலையைப் போல்; மக்கள் மன்றத்திலே பச்சை நிறமாகிவிட்டார் பேரறிஞர் அண்ணா.

மக்கள் மனதை, நல்ல நிறமாக்கிட, வளத்தை ஊட்டுகிறார் - தனது அறிவுத்திறனால்,

அந்த மலரின் பசுமையான புறவிதழ்கள் ஐந்தைப் போல, அவரது புறத் தோற்றப் பண்புகள் காணப்படுகின்றன.

அதன் அகவிதழ்கள் ஐந்தை ஒப்ப அவரது ஐம்புலன்கள் பணியாற்றுகின்றன.

அவற்றுள் ஒரிதழ் மட்டும் மஞ்சள் நிறம்! இயற்கையின் படைப்பே படைப்பு அழகைப் படைக்க இயற்கை கலைஞனுக்கு ஈடு எவருளர்? தம்பி.

அதனாலன்றோ அம்மலர் கண்கவர் வனப்பு பெறுகிறது! மஞ்சள் நிற இதழைப் போல. அவர் சமுதாயச் சீர்திருத்தங்களைச் செய்து வருகிறார்!

அதனால்; அவர் பசுமையான சீர்திருத்தவாதியாக விளங்குகிறார்:

மாதவிப் பூ வெண்மை நிறமானதன்றோ! அந்தத் தமிழ் மகனின் உள்ளமும் மாதவிப் பூவைப்போன்றதே, என்பதனை மக்களறிந்து கொண்டனர்!

மனம் திறந்த மக்கள், மடைதிறந்த வெள்ளம் போல அவரைப் பின்பற்றி ஓடி வந்தனர்.

அப் பூவின் பத்து கேசரங்களும் பொன்னிறத் தாதை உகுத்து நிற்குமாம்!

அறிஞருள் அறிஞராக விளங்கும் அண்ணாவும் ; பொன் னிறத் தாதையொத்த தனது அறிவினை நமக்கு வழங்கினார்!

அம் மலரின் வண்ண தொசி எண் (chromo some Number) க்ரோமோசம் நம்பர் இன்றுவரை கண்டு கூறப்படவில்லை.