நைந்த மக்கட்கு நிம்மதி வழங்கியவர்!
கைதேர்ந்த அரசியல் பெரும் ஞானி!
அறிஞர் குல திலகம் அண்ணாவின் சமுதாயச் சீர்திருத்தம் துவஙுகு முன்பு காட்டிய நிறமும் - மஞ்சள் தானே!
எற்றுக்கு அவ்வண்ணமே தேர்ந்தெடுத்தார்?
பற்றியிருக்கும் இந்நாட்டு மூடநம்பிக்கைப் பிணியை சுட்டுதற்கு?
'மஞ்சள் பெட்டிக்கே மகத்துவம் மணக்குது மகாத்மா வாக்கியம்' என்று காங்கிரசார் தேர்தல் ஆலாபனை பாடியது, ஏன்?
அடிமை நோயைக் காட்டிட - அதனை அகற்றிட!
தேர்தல் வாயிலாக மக்களது வாக்குகளப் பெற்றிட! சுதந்திர தீயத்தை ஏற்றிடவன்றோ!
பிணியுள்ள இடத்திலேதான் மருத்துவப் பேரறிஞர்கள் தத்தமது பணியை தொடங்குவது வழக்கம்!
அண்ணனுடைய மஞ்சள் கொடியும் அது போன்றதன்றோ!
பண்புள்ளோர்; அன்னோனின் சேவையைத் தொழுது வனங்கினர்!
அஃதற்றோர்; நரம்பிலா நாவிற்கு வந்தவாறு பேசி ஆர்ப்பரித்தனர்.
நோயைத் தீர்ப்பது மட்டுமே கடனன்று அவருக்கு - உணர்ந்தார். இஃதை.
வாய்மைப் பொன்மொழியாலே; வடித்த மூலிகையின் சாரம்; பிழிந்தெடுத்தார்.
'சாகக் கிடக்கும் சமுதாயமே - சற்றே பிழைத்தெழு!’
என்று மருத்துவம் புரிந்தார்.
அன்னவரின் எச்சரிக்கை பதாகையென ஏற்றிய கொடியின் நிறம்; மஞ்சள் தம்பி - மஞ்சள்!”
இன்னல் இடர்பட்டு, இருந்த பொருள் இழந்தனர் மக்கள்.