74
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
ஆம், வேங்கைப் பூதான் என்று கூறியது.
வேங்கைப் பூ!
என்ன தம்பி வேங்கைப் பூ என்றதும் வெலவெலத்துப் போய் விட்டாயா?
வேங்கை என்ற வார்த்தை என்னோடு சேர்ந்திருப்பதால், நான் - புலி போலப் பாய்வேனோ? என்று அஞ்சுகிறாயா?
என் பெயரைக் கேட்டதும்; பின் ஏன், உன் உடலெலாம் உதறுகிறது?
அட மாயை மனிதா! என் பெயரைக் கண்டே புத்தி பேதலித்து விட்டாயே.
என் பெயர் வேங்கைப் பூ'தான். எனது வரலாறு தெரியுமா உனக்கு?
கூறுகிறேன் கேள் என்றது. வேங்கை பூ. என்னடா ஒவ்வொரு பூவும் நமது 'அறிவைச் சோதிக்கின்றனவே என்று வியந்தான் மாயையை நம்பிய மனிதன் .
உனது வரலாறு என்ன? அதை உரை, கேட்கிறேன் என்றான் அவன்.
வேங்கைப் பூ தனது மேதா விலாசத்தைப் பூரிப்போடு புகன்றது.
தம்பி, தமிழ் இலக்கியங்கள் நீ படித்திருக்கிறாயா? அவற்றை நீ நாடியிருந்தால்; நான் உனக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருப்பேனே!
கன்னித் தமிழ் இலக்கியப் புலவர்கள், வேங்கை மரத்தைப் பற்றிப் பெருமையாகப் பாடியிருக்கின்றனர்.
நான் எங்கே விளைகிறேன் தெரியுமா? அது ஒரு பெரிய வரலாற்றுக்குரிய இடமாகும்.