80
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
வேழம் ஒன்று, ஒரு நாள் ஒரு வரிப்புலியோடு பொருதிற்றாம்.
அந்தப் புலியின் உகிரால் விளைந்த வடுக்களை எண்ணி, கரி வீர வருத்தம் கொண்டதாம்.
அதே அத்தி, பிறகு அதே நினைவுடன் துயில் கொண்டதாம்.
அப்போது கனவு ஒன்று கண்டது வாரணம். புலியின் தோற்றம் அக் கனவிலே வந்ததாம்.
உடனே வேழம் துயிலை நீக்கியது.அதே சினத்தோடு பொங்கி எழுந்தது.
கனவிலே வந்த புலியைக் காணவில்லை. எதிரே புதிதாய் பூத்து மலர்ந்த வேங்கை மரத்தை அந்த வேழம் கண்டதாம்.
அந்த மதத்தை வரிப் புலியென மயங்கி; அதன் ள்ழில் தோற்றத்தைக் “கை” யால் முறுக்கியது.
எழிலை வீழ்த்தியது. கழலால் துவைத்தது.
அம் மரம் போல் பிறிதோர் மரம் காணுங்கால்; களிறு நல்நோக்கு பாராது வெறுத்தே விலகிற்றாம்.
'கலித்தொகை'யிலே வரும் "கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு” என்ற 49-வது பாடல் இந்தக் கருத்தைக் கூறுகிறது.
களிறே வேங்கைப் பூ மலர்ச்சியைக் கண்டு புலியென நம்பிற்றென்றால், காரிகையர் ஏன் ஏமப் பூசலிடார் என்றது வேங்கைப் பூ.
முடிந்ததா பூவே, உன் முழு வரலாறு, என்று மாயை மனிதன் கேட்டான்.
இல்லை தம்பி, பூவின் சில பாகங்களைக் கூறினேன். பிற பகுதிகளையும் கூறுகிறேன் கேள் - என்றது. பூ
மாயை நிரம்பிய மனிதன், வேங்கைப் பூ புகன்ற, வரலாற்றைக் கேட்டு மயக்கமடைந்தான்.
என்னே! மானிடர் கூட்டத்தின் பிரதிநிதியே. பூ உரைப்பது புனைந்துரையோ என்று மயங்குகிறாயா?