பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி


வேங்கை பூ உதிர்ந்து, இதழ்களிழந்து, மடிந்து மண்ணோடு மண்ணாகி விடுமே என்று கருதுகிறாயா?

மனித வாழ்க்கையின் தத்துவமே அது தானே! அதற்கு அண்ணா மட்டும் விதி விலக்காகிட முடியுமா?

அல்லது அமிழ்தம் உண்டு விட்ட அமரர் குலமா அவர்? இல்லையயே! சாதாரண மனித இனம் தானே!"

எனவே, பிறப்பன - இறப்பன உலகத்தின் பழக்க வழக்கங்களிலே, ஒன்றாகவிட்டத் தத்துவம்! அதற்காக கவலைப்படாதே!