பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

அறிஞர் அண்ணா நினைவஞ்சலி


அவன் வருகையால் - அகமகிழ்ந்தனள் இயற்கை!

மணக்கோலம் பூண்ட பாவையைப்போலகளுக்கென்று சிரித்தது!

சிரிப்புகள் அனைத்தும் தெறித்தோடி - கடலின் சிப்பிக்குள் முத்தாய் உறங்கின.

அழகு புறப்பட்டு அறிவை வரவேற்றது! பழக நினைத்த ஞானம், அவர் பாதத்திலே விழுந்து பணிந்தது!

அந்த மனிதன், கல்லாமையின் எதிரி! கயமையின் பகைவன் குணக்குன்றில் ஏற்றிய விளக்கு! என்றெண்ணி வணங்கத் தலைப்பட்ட வாரணங்கள் எத்தனை? முகிலின் தோரணங்கள் எத்தனை?

ஒளியால் நிழல் தடுக்க மாட்டாத திங்கள், குடைபிடிக்க ஒடி வந்தான்.

இத்துணைச் சிறப்புக்கும் உருவாகி - தெளிவாகி - பொருளாகி, மருள் நீக்கும் மருந்தாகி - அருளாகி, நிற்கின்றான் அந்த மாமேதை!

பல்லோர் போற்றும் அவனை, அவனி நல்லோனென வாழ்த்துப் பாடிற்று!

உடன் பிறந்த பாசத்தால் உந்தப்பட்டோர் - அவரை அண்ணனென்றனர்!

கல்விப் பசிகொண்ட ஏழைகள், அறிஞர் என்று கழறினர்! கற்பனைக்குப் பொருள் தேடிக் காலமெலாம் காத்திருந்து, சொற்பல கிடைத்தாலும், சொர்ணச் சுரங்கமாய் - கவிதை யாக்கத் தலை குத்திக் கொள்ளும் சீத்தலைகள் - இல்லை யென்றால் கவிஞர்கள் - அவரைக் கவிதைக்கு மூலமென்றனர்!

அத்தகைய அண்ணனை நானென்ன நவின்று! அழைப்பது?

அன்னையின் அணைப்பறியேன்.