இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
94
அறிஞர் அண்ணா நினைவஞ்சலி
கடலோரத்தில் கிளிஞ்சலாக என்னை உலவ விடு.
உன் கலைத்திறனின் உருவமாகக் காட்சியளிப்பேன்.
மலையென என்னை ஆக்கு. உன் வான்புகழை ஏந்திக் கொண்டே இருப்பேன்.
நீ இயற்கையில் இளமையோடிருப்பவள்.
நான் உன் அமைதியில் பிறந்தவன்! மோனத்தில் கருவானவன்!
உன்னைப் பிரதிபலிக்க நான் எப்போதும் காத்திருக்கிறேன்.
தனிப்பட்டவனல்ல நான்; உனது ரத்தம் தாயே - ரத்தம்?
என்னைப் புகழ்வோரெல்லாம், உன்னைப் புகழ்கிறார்கள்?
நான் பெறும் வாழ்த்துக்கள் அத்தனையும்; உனக்களிக்கும் வாழ்த்துக்கள்!
★★★