-- ___ உழைப்பாளிகளின் தலைவன் 19 நில்லாது இக் கருத்துக்களை யுத்தக் கைதிகளிடையே பரப்பி வரலார்ை. பிற்காலத்தில் இதைப்பற்றி அவர் குறிப்பிட்டதாவது , " நான் போல்ஸ்விக்கின் கொள்கைகளை முழுமனதுடன் வரவேற்கிறேன் ; வாழ்த்துகின்றேன் ; அவைகள் வாழ, வளர, நான் என் தோழர்களோடு சேர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டேன். ஆனல் 1918-ல் எங்கள் முகாம் மாற்ருர் கையில் சிக்குண்டதால் அங்கிருந்து தப்பி ஓடினேன். அங்ங்ணம் செய்யும் பொழுது இர்கட்ஸ் கட்சி எனக்கு உதவியது என்றும் மறக்கற்பால தன்று. அவர்களது உதவியால் ஒரு மாதகாலம் பிரயாணம் செய்த பின்னர், இறுதியில் புரட்சிக் கனல் மூண்டு கொண்டிருந்த லெனின்கிராடைச் சேர்ந்தேன்.” தாய் நாட்டிற்காகப் போராடல் லெனின்கிராடிலிருந்த நண்பர்கள் ராகோசியை மீண்டும் ஹங்கேரிக்குப் போகும் வண்ணம் வேண்டவே, அவர் உடனடியாகத் தன் தாய்நாட்டை அடைந்தார். நல்லவரின் தன்மையினை எவரும்
விரைவில் தெரிந்து கொள்ளார்; நாளடைவில்தான் தெரிந்து கொள்வர். இது உலக இயற்கையாகும். எனவே ஊர் திருப்பிய ராகோசியினை நன்கு புரிந்து கொள்ளாத மக்கள் நாட்டைக் காட் க் கொடுக்கும்
o . யவஞ்சகன் ' என அவருக்குப் பட்டம் சூட்டினர். ஆஸ்டிரிய - ஹங்கேரி இராணுவ அதிகாரிகள் அவ ரைச் சாபாட்கா நகரத்திற்கு அனுப்பினர். ெ நருப்பி லிட்டாலும் தன் பொறுப்பை மறவாத் தன்மை