234 அடிசன் நோய்
லோடோடிஸ் (க௱டு104௦518), புற்றுதோய் முதலிய
காரணங்களினால் அண்ணீகரப் புறப்பகுதியின் பெரும்
பகுதிகள் அழிந்துபட்டு அடிசன் நோய் ஏற்படுகிறது.
கோய்க் குறியியல்
அடிசன் நோயின் தொடக்க காலத்தில் அண்ணீரகப் புறணியில் இசுக்கள் குறைகின்றன. அவ்விடத்தில் அழற்சி உண்டுபண்ணுகிற திசுக்கள் அதிகமாசக் காணப்படுகின்றன. இதனால் புறணியில் தஇசுக்கள் அங்கங்கே கூட்டம் கூட்டமாகக் காணப்படுகின்றன. நோய் முற்றிய நிலையில் புறணி தேய்ந்தும், மெலிந்தும் காணப்படுகிறது. அண்ணீகரப் காப்பு மூலங்கள் (க&௱(1- ௦0/) இரத்தத்தில் காணப்படுகின்றன. பொதுவாக 15 வயதிற்கு மேத்பட்டவரிடமே இந்நோய் காணப் படுகிறது. இது ஆண், பெண் இரு பாலரையும் சம மாசுவே பாதிக்கிறது, பெரும்பாலும் இது ஒர் இடை நிகழ்ச்சியாக ஏற்படுகிறது. அல்லது வேறு ஏதாவது கடுமையான தோய்ப் பாதிப்பைத் தொடர்ந்தோ, அறுவைக் சி௫ச்சையைத் தொடர்ந்தோ, அடிபட்டுக் காயம் ஏற்பட்ட நிலையைத் தொடர்ந்தோ ஏற் படலாம்.
நோய் அறிகுறிகள்
தளர்ச்சி, சோர்வடையும் நிலை, நிறத்தில் மாற்றம், :
பசியின்மை, வாந்தி, வயிற்றுப்போக்கு, தடைப்பட்ட மயீர் வளர்ச்சி ஆகிய நோய் அறிகுறிகள், குளோகா கார்டிகாய்டு சுரக்கும் பகுதி பாதிக்கப்படுவதால் விளை கின்றன.
எடை குறைவு
உடலில் நீர் வற்றிய நிலை, குறைந்த இரத்த அழுத் கமும் சிறுத்த இதயமும், மயக்கம், தலைசுற்றல் ஆய வை மினரலோகார்டிகாய்டு சுரக்கும் பகுதி பாதிக்கப்படுவதால் விளைவன.
தோயின் கடுமைக்கேற்பத் தளர்ச்சியும், சோர்வடை யும் நிலையும் அதிகமாகின்றன. தசைத் தளர்ச்சியோடு தரம்புத் தளர்ச்சியும் ஏற்படுகிறது. இதனால் நிதானம் இழத்தல், கோபித்தல் ஆகியவையும் ஏற்படுகின்றன. பொதுவாக கறுப்பு அணுக்கள் தோலில் சேர்க்கப்படு வதால் அவை உடலின் வெளியில் தெரியும் பகுதிகளி லும், துணியால் மூடப்பட்ட பகுதிகளிலும் கருமை றம் அதிகரித்து ஊதா திறம் ஏற்படுகிறது. அதிலும் முழங்கால், உள்ளங்கையின் மடிப்புகள், முலைக்காம் பின் அடிப்பாகம், உதடு, ஈறு, முழங்கை ஆகிய இடங் களில் இட்டுத் திட்டாகக் சருமை நிறம் காணப்படும். மற்றும் 75% பேருக்குக் கறுப்பு அணுக்கள் குறைந்து வெளிர் திட்டுக்கள் ஏற்படலாம். அமிலம் சுரக்கும் இசுக்கன் மிகவும் குறைந்து போவதா லும், குடலின் அசைவுத் தன்மை பாிக்கப்படுவ தாலும் இவை ஏற்படுகின்றன. பொதுவாக எல்லா இடங்களிலும் மயிர் வளர்ச்சி தடைப்படுகிறது, முக்கிய மாசுப் பெண்டிரின் அக்குளில் மயிர் வளர்ச்சி தடைப்படு
இரைப்பையில் '
கிறது. எடைக்குறைவு ஒரு முக்கிய அறிகுறியாகும். இது ப௫ியின்மையாலும், அதிகமாக உப்புச்சத்து இழக்கும் தன்மையால் ஏற்படும் உடலின் நீர்வற்றிய நிலையாலும் ஏற்படுகிறது. உடலில் நீர்வற்றிய நிலை யால் குறைந்த இரத்த அழுத்தமும் அதனால் சிறுத்த இதயமும் அமை௫ன்றன. உடலில் நீர்வற்றிய நிலையின் காரணத்தாலும், ப௫ியின்மையால் ஏற்படும் விளைவு களினாலும், கலைகற்றல், மயக்கம் ஆகியவை ஏற்படு இன்றன, மேலே குறிப்பிடப்பட்டவை தவிர மேலும் சல அறிகுறிகள் இருக்கலாம், தசை அண்டியிழுத்தல், os கால்களில் முடக்குவாதம், பல் சொத்தை ஆூயவை காணப்படலாம். ஆனால் இனப்பெருக்கத் தைச் சார்ந்த பாகங்களும், அவற்றின் வேலைகளும் பாதிக்கப்படுவதில்லை.
கோய் அறிதல்
குறைந்த இரத்த அழுத்தம், எடைக்குறைவு, பர யின்மை, தளர்ச்சி, சுருநிறமாற்றம் ஆய பல அடை யாளங்களைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். அடிசன் நோயின் அறிகுறிகள் வேறு சில நோய் நிலைகளிலும் ஏற்படக்கூடும். ஆகையால் ஆய்வு மூலம் கண்டு பிடிப் பதே சாலச் சிறந்தது. குளோகோகார்டிகாய்டுஅளவை யும்,மினரலோகார்டிகாய்டு அள வையும் கண்டுபிடிக்கப் பல்வேறு முறைகள் உள்ளன. முதலில் இரத்தத்தில் உள்ள கார்டிகாய்டு அளவைக் ' கண்டுகொள்ள வேண்டும். பிறகு 0.25 மில்லிசிராம் அளவு ₹*செயற் கையான 24 அமினோ அமிலம் ஏ.ஏ9.டி.எச்”? (A-C.T.H) என்னும் பொருளைத் தசைக்குள் ஏற்றி முப்பது நிமிடங்கள் கழித்து இரத்தத்தில் உள்ள கார்டி காய்டு அளவைக் கண்டு பிடிக்க வேண்டும். சாதாரண மாக உள்ளவர் சுளுக்கு கார்டிகாய்டு அளவு இரண்டு மடங்குக்கு மேலாசு அஇசரிக்கும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கார்டிகாய்டு அளவுஃஇவ் வளவு அதிகமாவதில்லை. இதைத்தவிர மற்ற இரத்த ஆய்வுகளில் ஓரளவு குறைந்த வெள்ளைத் இசுக்களின் அளவையும், இரத்தத்தின் சாக்கரைப்பொருள் அள வின் குறையையும் காணலாம். நிறுத்த இதயத்தைக் காணலாம். முதல் இடுப்பு எலும்பு அளவில் சுண்ண மயமாக்கப்பட்ட (081014௦2௦௩) இடங்கள் தென் படலாம். காரணமின்றிச் ல இனங்களில் காணப்படும் ஊதாநிறம்' மற்ற தன் ஒவ்வாமை நோய்கள் இரத்த சோகை, காசதோய், பசியின்மையோடு கூடிய நரம்புத் தளர்ச்சி ஆ௫யவைகளிலிருந்தும் அடிசன் தநோயை அதன் முக்கிய நான்கு . குணக்குறிகளான குறைந்த இரத்த அழுத்தம், எடைக்குறைவு, பசியின்மை, தளர்ச்சி ஆகியவை மூலமும், கார்டிகாய்டு அளவுப் பரிசோதனை மூலமும் பிரித்து அடையாளம் கண்டு கொள்ளலாம்.
சிகிச்சை முறை
எல்லாச் ச௫ச்சை முறைகளும் கார்டிசான் (01115006) அளவைச் சரி செய்வதையே நோக்கமாகக் கொண் டலை., அதிக உப்புச்சத்துள்ள உணவை உட்கொள்