பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். பூவணணன்

93


கொண்டபோது கூறிய கருத்து. இக்கருத்தைப் பொய்யாக்குவதற்காகவே ஒருவர் பிறந்திருக்கிறார் என்பதை அப்போது நான் உணரவில்லை. அவர் மண்ணகம் முழுதும் அறிந்து போற்றும் 'அறிவியல் தமிழ் வித்தகர்' மணவை முஸ்தபா அவர்கள்.

மணவையார் 1965இல் தென் மொழிகள் புத்தக டிரஸ்டில் பணியாற்றிய காலம் முதலே எனக்கு அறிமுகமானவர். அறிவும், ஆற்றலும் அறிவியல் தமிழார்வமும் பொங்கிப் பெருகும் கங்கையைப் போன்ற மணவையார், நான் மேலே சொன்ன கருத்தை உடைத்து, விதிக்கு ஒரு விலக்கு உண்டாக்கிவிட்டார். மணவையார் கவிஞரல்லர்; ஆனால் சிறுவர்களிடம் பேரன்பும், அக்கறையும் கவிஞர்களுக்கே உண்டு என்று நான் கூறினேனே, அதைக் காட்டிலும் அதிக அன்பும், அக்கறையும் கொண்டவர். இனி இந்த நாட்டை ஆளப் பிறந்த அரும்புகளுக்கு அவர் ஆற்றிய தொண்டு பெரிது. குழந்தை எழுத்தாளர் என்னும் பட்டம் சூட்டிக் கொண்ட ஒருவர் சராசரியாக ஆற்றும் சிறுவர் இலக்கியத் தொண்டைவிட அதிகம்! மிக அதிகம்!

அறிவியல் வித்தகர் மணவையார்

மணவையார் முதலில் ஓர் அறிவியல்வாதி! அனைத்து அறிவியல் மூலங்களையும் கூறுகளையும் அன்னைத் தமிழில் அளிக்க முடியும் என்று சொல்லி, சொல்லியதை செயல்படுத்தி, அச்செயலில் மிகப் பெரிய வெற்றி பெற்ற வர். மொழிப்பெயர்ப்புக் கலையின் முடிசூடா மன்னர். அப்படிப்பட்டவர், தனது விசுரூப உருவைக் குறைத்துக் கொண்டு - மறைத்துக் கொண்டு, ஆயர்களின் மத்தியில் ஆநிறை மேய்த்த மாயக் கண்ணன் போல் எளிய வடிவம் எடுத்துக் கொண்டார். ஆம், குழந்தை எழுத்தாளரானார்.