இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
100
அறிவியல் தமிழ்
‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்.’[1]
என்ற ஆணையைச் செயற்படுத்துதல் வேண்டும்.
“வெளியுலகில் சிந்தனையில் புதிதுபுதிதாக
விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாம் சண்டு
தெளிவுறுத்தும் படங்களொடு சுவடியெலாம் செய்து
செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவும் வேண்டும்:
..........................................
உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூல்கள்
ஒருவர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்
என்ற கவிஞனின் கட்டளையை நிறைவேற்றுதல் வேண்டும், இதுவே தமிழ் மொழியில் அறிவியல் வளர்ச்சிக்கு உரிய தலையாய தொண்டாகும்; பக்தியுடன் மேற்கொள்ள வேண்டிய விழுமிய பணியுமாகும்.