பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அறிவியல் தமிழ்

வளங்களை நோக்கிக் காந்தருவ தத்தையையும் குண மாலையையும் நினைந்து பலவாறு புலம்பி மிக்க வருத்தத்துடணிருக்கின்றான். இந் நிலையில் அந்நகரத்து அரசன் தடமித்தனின் புதல்வன் விசயன் என்பானை அச்சோலையில் காண நேரிடுகின்றது. விசயன் சீவகனின் தேயம் முதலியவற்றை வினவ, சீவகனும் தான் இன்னானென்று புலப்படா வண்ணம் அவற்றைக் கூறுகின்றான். பின்னர் அச்சோலையிலிருந்த ஒரு மாமரத்தினின்று ஒரு மாங்கனியை ஒரம்பினால் வீழ்த்திய முறையினால் சீவகன் தான் விற்றொழிலில் வல்லவனாதலைப் புலப்படுத்துகின்றான். பின்னர், சீவகன் தடமித்தன் புதல்வர்கள் விசயன் முதலிய ஐவர்கட்கும் வில் வித்தை கற்பித்து அவர்களை அவ் வித்தையில் வல்லுநராக்குகின்றான். அரசன் அதனை யறிந்து அளவற்ற மகிழ்ச்சியுறறுத் தன் அருமை மகன் கனகமாலையை மணம் புரிவிக்கின்றான். சீவகனும் கனகமாலையுடன் இனிதே வாழ்கின்றான்.

சிறையினின்று தப்பிய சீவகன் யாண்டுள்ளான் என்பதை நந்தட்டன் முதலிய அவனுடைய நண்பர்கள் அறியக் கூடவில்லை. நாடெங்குந் தேடியும் அவனைக் காணாது காந்தருவதத்தையை அடைகின்றனர். அவளோ தன்னுடைய விஞ்சையின் மகிமையால் சீவகன் செயல்களை யறிந்து சிறிதும் வாட்டமின்றி இருக்கின்றாள். அங்ஙணம் அவர்கள் வாட்டமின்றி இருத்தலின் காரணத்தை வினவிய நந்தட்டனுக்கு,

“கொதிமுகக் குருதி வைவேல்
    குரிசிலோ நம்மை யுள்ளான்;
விதிமுக மணங்கள் எய்தி
    வீற்றிருந் தின்பம் உய்ப்ப
மதிமுகம் அறியும் நாமே
    வாடுவ தென்னை?”[1]


  1. 1. சீவக சிந்தா-1708