பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

அறிவியல் தமிழ்

செய்யாது விடுதல்; (5) மகா விசுவாசம் என்பது. அவன் நம்மைக் காக்கவல்லவன் என்று தேறி, தவறாது காப்பான் என்றும் உறுதியாக நம்புதலாகும்; (4) கோப த்ருத்வ வரணம் என்பது, பக்தி யோகம் முதலிய உபாயங்களை அநுட்டிக்க ஆற்றலற்ற தம்மிடம் அருள் புரிந்து அவ்வுபாயங்களின் இடத்தில் நின்று பலன் தருமாறு அவனை வேண்டுகையாகும் இது: (5) கார்ப்பண்யம் என்பது, பக்தியோகம் முதலிய உபாயங்களில் தமக்கு அதிகாரமில்லாமையையும், எம்பெருமானைத் தவிர வேறு தெய்வத்தினிடமோ, வீடுபேற்றினைத் தவிர வேறு பலனிலோ பற்றில்லாமையையும் அநுசந்தித்தல்; அல்லது இவ்வறுசந்தானத்தால் முன் தம்மிடமிருந்த முனைப்பு ஒழியப் பெறுதல்; அல்லது எம்பெருமானின் கருணை தம் மீது வளர்ந்தோங்கும்படி தாழ்ந்து நின்று அஞ்சலி[1] முதலிய வற்றைச் செய்தல் ஆகும். ஆழ்வார்களின் பாசுரங்களால் தெளிந்து அறியப் பெறுவது இந்த பிரபத்தி நெறியேயாகும். பொய்கையாழ்வார் பாசுரம் ஒன்றில் இந்நெறி குறிப்பிடப் பெறுகின்றது.

“அடைந்த அருவீனையோ
   டல்லல்நோய் பாவம்
மிடைந்தவை மீண்டொழிய
   வேண்டில் நுடங்கிடையை
முன்னிலங்கை வைத்தான்
   முரணழிய முன்னொருநாள்
தன்னிலங்கை வைத்தான்

   சரண்”[2]

  1. 21. அஞ்சலி-அஞ்ஜலி (ஆம்-ஜலயஇ) கைகளைக்கூப்பு வதற்கு இப்பெயர். இச்செய்கை எம்பொருமானை நீர்ப் பண்டமாக உருகச் செய்தலால் இதற்கு இப்பெயர் வந்தது.
  2. 22. முதல் திருவந்-56