பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 அறிவியல் தமிழ்

தல், காத்தல், துடைத்தல், மறைத்தல், அருளல் என்ற திருத்தொழில்கள் ஐந்தும் ஆருயிர்களின் நன்மையின் பொருட்டேயாகும். இவை அனைத்தும் சிவசக்தியின் வாயிலாகவே அவன் செய்தருள்கின்றனன், அம்மையும் அப்பனும் துண்ணறிவு அம்பலமாம் திருச்சிற்றம்பலத்தின் கண் விளங்கியருள்கின்றனர். அதனால் எல்லாம் சிதம்பர மாகின்றது; அவன் செய்தருளும் திருக்கூத்தும் எங்கும் நிறைத்து காணப்பெறுகின்றது. எல்லாவுயிர்களும் உலகங் களும் எல்லா உலகியற் பொருள்களும் அவனைச் சார்ந்து நிற்கின்றன. சுருங்கக் கூறின், உலகமெலாம் சிவத்தின் திருக்கூத்தாகும். இதனால்தான் திருமூலரும் அம்பல மாவது அகில சராசரம்' என்றனர். இதனையே சிவஞான சித்தியாரும்,

'கலகமே உருவ மாக

யோனிகள் உறுப்ப தாக இலகுபேர் இச்சா ஞானக்

கிரியையுட் கரண மாக அலகிலா உயிர்ப்பு லன்கட்(கு)

அறிவினை ஆக்கி ஐந்து நலமிகு தொழில்க ளோடும்

நாடகம் நடிப்பன் நாதன்'. '

என்று விளக்கியுரைக்கின்றது. ஆருயிர்கள் எல்லாமும் பேரின்பம் எய்தும் பொருட்டே இறைவன் இந்த ஐந் தொழில்களைப் புரிந்தருள்கின்றனன்.

ஊழியின் முடிவில் இந்த அகிலம் முழுவதும் அணுத் தத்துவமாக மாறும் என்பதையும், மீண்டும் படைப்புக் காலத்தில் அஃது அண்டங்களாக வடிவெடுக்கும் என்பதை யும் மெய்யுணர்வு பெற்ற தாயுமான அடிகள்,

ہیبی ہےہیے........ یع.s:جسم********

5. சிவஞான சித்தியார்.சுபக்கம் 237

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறிவியல்_தமிழ்.pdf/48&oldid=534067" இலிருந்து மீள்விக்கப்பட்டது