கம்பன் கண்ட மெய்ப்பொருள்
61
“ஓயாத மலரயனே முதலாக உளராகி
மாயாத வானவிர்க்கும் மற்றொழிந்த மன்னுயிர்க்கும்
என்று பின்னும் வற்புறுத்துவன். இக்கருத்துகள்,
“தான் ஓர் உருவே தனிவித்தாய்
தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
மற்றும் மற்றும் முற்றும் ஆய்”[2]
என்ற ஆழ்வார் பாசுரக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு வந்திருப்பது கண்டு மகிழத்தக்கது.
இறைவன் இவ்வுலகத்தைப் படைக்கும்பொழுது யாதொரு விகாரமும் அடைவதில்லை.[3] இக்கருத்தைக் கம்பநாடன்,
“அண்டம் பலவும் அனைத்துயிரும்
அகத்தும் புறத்தும் உளவாக்கி
உண்டும் உமிழ்ந்தும் அளந்திடந்தும்
உள்ளும் புறத்தும் உளையாகிக்
கொண்டு சிலம்பி தன்வாயில்
கூர்நூல் இயையக் கூடுஇயற்றிப்
பண்டும் இன்றும் அமைக்கின்ற
என்று தேவர்களின் வாய்மொழியாகக் கூறுவன். "ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் ஸ்ர்வ லியக்திக்குக்-
———————