பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

அறிவியல் திருவள்ளுவம்

நாட்டையோ மக்களையோ உயிரினங்களையோ பகை, இயற்கை, குணக்கேடு, மொழி ஆட்சி முதலியவை தாக்குமானால் பல்வகைப் பாதுகாப்புகள் வேண்டும்.

இப்பாதுகாப்பு எதனால் அமையும்? எதனால் அமையும் என்பது பொருந்தாது. எவற்றால் அமையும் என்பதே பொருந்தும்.

திருவள்ளுவர் பாதுகாப்பனவாகப் படையையும், அரண்களையும், ஆட்சித் திறனையும் கூறியுள்ளார். இவை நாட்டையும் நாட்டு மக்களையும் உயிரினங்களையும் காக்கும்.

மனத்துன்பத்தை, வாழ்க்கையை, பண்புகளைக் காக்கும் ஏமங்களாகத் திருவள்ளுவர்

          செல்வம் (1.12)
          அடக்கம் (128)
          கல்வி (398)
          கேண்மை(815)
          இனநலம் (458, 459, 306, 868)
          அரண் (742, 744, 750)

பொருளியல், உளவியல், உளப்பகுப்பியல், கல்வியியல், அரசியல், குமுகாயவியல், கட்சி அரசியல், போர்முனை இயல், வாழ்வியல்.

ஆகியவற்றை ஏமமாகக் கூறியுள்ளார். இவை காக்கும்திறத்தைக் கூறியுள்ளமை இக்கால அறிவியல் துறைகள் பலவற்றுக்கு முன்னோடியாக உள்ளது.