பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



கோவை. இளஞ்சேரன்

11

இலக்கணம் வழுவாது எழுதினர். அவர்தம் செய்யுள்களும் பாக்களும் பாட்டும் 'பாரதியார்கவிதைகள்', 'பாரதிதாசன் கவிதைகள்’ எனக் கவிதைப்பெயரில் வழங்கப்படுகின்றன.

பொதுவான ஒரு கருத்து, 'செய்யுளைப் பாடுபவன் புலவன்; கவிதை எழுதுபவன் கவிஞன் என்பது. இதற்கு மாற்றாக ஓர் அமைதி சொல்வதுபோன்று திருஞானசம்பந்தர் "உரவார் கலையின் கவிதைப் புலவர்"[1] என்று "கவிதைப் புலவர்" என்னும் தொடரை வழங்கினார்.

ஒரு கருத்திற்குப் பழமைச்சொல்லும் இருக்கும். புதுமையாகச் சொல்லாக்கமும் அமையும். இவ்விரண்டையும் சங்க இலக்கியங்களிற் காணலாம்.

கவிதை - சங்கச்சொல்

'செய்யுள், பா, பாட்டு’ என்னும் பழமைச் சொற்களை தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காண்கிறோம். சொல்லாக்கமான 'கவிதை' என்னும் சொல்லை முதன்முதலில் பரிபாடல் காட்டுகிறது.வையை ஆற்றைப் பாடிய ஆசிரியர் நல்லந்துவனார் என்பார்,

"புலவர் புல
நாவிற் புனைந்த நன்கவிதை"
[2]

என்று பாடினார். இதிலுள்ள ‘கவிதை' என்னும் சொல் அக்காலப் புதுமைப் படைப்புச் சொல். புலவர் புலமையால் பாடும் செய்யுளுக்குத்தான் 'கவிதை' என்னும் சொல்லை ஆக்குவதாக ஆசிரியர் நல்லந்துவனார் "புலவர்,


  1. 1.திருஞான சம்பந்தர்
    -தேவா, பிரமபுரம்

  2. 2. நல்லத்துவனார்
    -பரிபாடல்-6-8