பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அறிவியல் திருவள்ளுவம்

யாவார். இச்சொல்லிலும் திருவள்ளுவர் மனம் பற்றியதை உணரலாம்.

அறிவியல் பொருள் பொதிந்த இவ்விரு சொற்களில் திருவள்ளுவர் கருத்துரன்றியமையைக் கணக்கில் கொண்டால் திருவள்ளுவர் அறிவியற் கவிஞர்' என்பதற்கு மேலும் ஒரு துணைச் சான்று ஆகின்றது.

இவ்வாறாக,

"வளிவழங்கு மல்லல் மா ஞாலம்" என்னும் திருவள்ளுவர் கருத்து 15ஆம் நூற்றாண்டுக் கண்டு பிடிப்பான வான அறிவியலுக்கு ஒரு முன்னோடித் தொடராக அமைந்ததாகும்.

‘வானவியல்’ என்னும் சொல் இக்காலப் புத்தாக்கச் சொல்லன்று. முன்னையப் பழந்தமிழ்ச் சொல்லேயாகும். 15ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த இடைக்கட்டுச் சித்தர்

'வானியல் போல் வயங்கும் பிரமமே' என்று இச்சொல்லை அமைத்தார், அவரே,

"ஊனியல் ஆவிக்கு ஒரு கதியில்லை" என்று 'ஊனியல்' என்னும் அறிவுத் துறைச் சொல்லையும் எடுத்து மொழிந் தார். தமிழ்நூல்களுள் இக்கால அறிவியல் ஆக்கச் சொற்கள் பல ஆக்கப்பட்டன என்பதற்கு இஃதும் ஒரு சான்று.

திருக்குறளில் மேலே கண்டமை போன்று இக்கால அறிவியற் கண்டுபிடிப்புகளின் உள்ளீடான அடையாளங்கள் பல உள்ளன.

ஓரளவில் இங்கு மேலும் சில காணலாம்.