இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
54
அறிவியல் திருவள்ளுவம்
அறிவியலில் நோய் இயலும் திருவள்ளுவமும்
புதுமைக்கால அறிவியலில் உடலியலுடன் தொடர்புடையது நோய் இயல்' (Pathology) என்னும் ஒன்று. 'நோய் இயல்' ஒன்றை ஆராய்வதாக நோய் அறிவியல் வல்லுநர் கண்டுள்ளனர்.
- 1. நோயின் காரணங்களை ஆராய்தல்;
- 2. அக்காரணங்கள் செய்யும் உடல் அமைப்பு மாறுதல்களை ஆராய்தல்:
- 3. காரணங்களையும் மாறுதல்களையும் எதிர்க்கும்
முறைகளை ஆராய்தல்.
இவை மூன்றையும் மருந்து அதிகாரக் குறட்பாக்களில் காண்கின்றோம். இவ்வதிகாரத்தில்,
முதற்குறள்,
- ’வளிமுதலா (வளி, பித்தம், ஐ) எண்ணிய மூன்று
- மிகினும் குறையினும் நோய் செய்யும்’
என்று நோயைச் செய்யும் காரணிகளான வளியும், பித்தமும், சளியும் சமநிலையில் இல்லாமல் மிகுந்தாலும் நோய் உண்டாகும்; குறைந்தாலும் நோய் உண்டாகும் என்று (1) நோயின் காரணங்கள் ஆராய்ந்து காணப்பட்டன. இது நோய் இயலின் முதல் ஆய்வை உள்ளீடாகக் கொண்டது.
அடுத்த ஆறு குறட்பாக்கள்,
உண்பது செரித்ததை அறிந்து உண்ணல்;
அளவறிந்து உண்ணல்;