பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

61

இதனையே தொடர்ந்து

"மாறுபாடு இல்லாத உண்டி" என்றார். இவ்வுணவை அறிந்து மற்றவற்றை,

        "மறுத்து உண்ணின
        ஊறுபாடு இல்லைஉயிர்க்கு"  (945)

என்றார்.

"அற்றது போற்றுதல்". "அற்றது அறிதல்", "மாறு அல்ல துய்த்தல்", "பசித்துக் துய்த்தல்", "மாறுபாடு இல்லாமை", "மறுத்து உண்ணல்"-இவற்றால் நோய் வராமை மட்டும் அன்று; "மருந்து வேண்டா" என்பது மட்டும் அன்று. இவற்றால் உடல் காக்கப்படும் என்பது மட்டும் அன்று.

"ஊறுபாடு இல்லை உயிர்க்கு"-உயிருக்கே இக்கால வடமொழிச் சொல்லின்படி ஆபத்து-ஊறுபாடு இல்லை.

இடையில் மருந்தின் தொடர்பில் இக்கால அறிவியலைக் காணவேண்டும். அறிவியலில் ஒரு துறை 'உடலியல்' இதனுடன் இணைந்த துறை 'உணவியல்'. இவை இரண்டும் மருந்தியலின் தொடர்புடையவை. உணவியல் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு தனிக் கலையாகியுள்ளது, உணவில் 'சீருணவு' (Balanced Diet) இன்றியமையாதது. 'காப்புணவு' (Productive food) நோயின்றி உடலைக் காப்பது . 'ஒழுங்கான உணவு' (NormalDiet). உடலியக்கத்தை சீராக வைத்திருப்பது. இக்கால அறிவியலில் இவை மூன்றும் விரிவாகியுள்ளன. சுருக்கமாக இவற்றைத் திருவள்ளுவரின் உணவுக் கருத்துக்களாகக் கூறியுள்ளவற்றில் அடக்கலாம்.