88
அறிவியல் திருவள்ளுவம்
திருவள்ளுவர் கால உழவு இருவகை. ஒன்று நீர்ப்பாய்ச்சல் உழவு, மற்றொன்று புழுதி உழவு.
இதனை,
"ஏரினும் நன்றால் எருவிடுதல், கட்டபின்
நீரினும் கன்றதன் காப்பு"
(1038)
என்னும் குறளில், உழவுத் தொழிலின் செயற்பாட்டிை. அமைந்திருக்கும் வரிசை கொண்டு அறியலாம்.
முதலில் வானத்து மழையால் நிலம் நனைந்ததும், ஏரால் உழுதல்.
அடுத்துப் புழுதியில் எரு இடுதல்;
பின் களை எடுத்தல்;
பின் மழைநீரை நிரப்புதல்;
பின் கதிர்ப்பயிரைக் காத்தல்-என்பன புழுதி உழவாகும்.
திருவள்ளுவர் வாழ்ந்த பகுதி புழுதி உழவைக் கொண்டது.
திருவள்ளுவர் வாழ்ந்த இடம் முகவை, மதுரை மாவட்டச் சுற்றுவட்டத்தைக் கொண்டதாகும் என்று கண்ட என் கட்டுரை "வள்ளுவர் வாழ்விடம்" என்பது. இது 'கிராம ஊழியன்’ (அரசு இதழ்), குறளியம், 'மலைநாடு" (கோலாம்பூர் இதழ்), முதலியவற்றில் வெளி வந்து பாராட்டைப் பெற்றது. பின் புதையலும் பேழையும் என்னும் என் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது.