பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கோவை. இளஞ்சேரன்

93

திருவள்ளுவர் 'வாய்மை' அதிகாரத்தில் அடுத்தடுத்து வைத்துள்ளார்.

"தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" (293)
"உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்" (294)
"மனத்தொடு வாய்மை மொழியின்" (295)
"அகம் தூய்மை வாய்மையால்' (293)

நான்கு சொற்களில் 'அகம் இடத்தைக் குறிக்கும். அவ்விடம் நெஞ்சம் என்று குறிக்கப்பட்டுள்ளது.

உள்ளம் - உள்ளே அமைந்தது.
மனம் (மன் + அம்) - நிலைத்தது (மன்-நிலைப்பு)

அகத்தே (உள்ளே) மனம் - (உள்ளம்) உள்ளது என்று பொதுவாக இடம் குறித்தார். இடம் என்றால் எந்த உறுப்பு என்னும் இடம் ? அதற்கு விடைதான் 'நெஞ்சம்' என்பது. நாம் இப்போது வடமொழியில் குறிக்கும் 'இதயம்' என்பதே நெஞ்சம். நெஞ்சில் கைவைத்துச் சொல்’ என்கிறோம். எங்கே கை வைப்பது? மார்பின் மையத்தில் கைவைப்போம். இவ்வழக்கிலும் நெஞ்சம் மார்புப் பகுதியில் அமைந்தது’ என்று அறிகிறோம். தனி உருவின்றி உணர்வே உருவாக நெஞ்சக இயக்கத்தோடு பிணைந்திருக்கிறது. இதன்படி "நெஞ்சம்" என்ற சொல்லை வைத்து உணர்ச்சியைத் தரும் உள்ளம் தெஞ்சகத்தில் உள்ளது என்றார். இன்று காணப்படாத ஒர் உண்மை அன்று திருவள்ளுவரால் ஓர் அதிகாரத்தில் நான்கு சொற்களைப் பெய்து காட்டப்பட்டுள்ளது.

உணர்ச்சிகளில் இன்பம் ஒன்று.