பக்கம்:அறிவியல் திருவள்ளுவம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

அறிவியல் திருவள்ளுவம்

இவை போன்று ஒன்றாக,

"இன்பம் கூடி முயங்கப் பெறின்" (1330) என்று உடலுறவு இன்பம் குறிக்கப்பட்டது.

இவ்வாறெல்லாம் இன்பத்தை விளக்கும் திருவள்ளுவர் இன்பத்துடன் துன்பத்தைத் தொடர்புபடுத்திப் பாடியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.

          "இன்பம் இடையறா தீண்டும், அவாவென்னும்
          துன்பத்துள் துன்பம் கெடின்” (369)

          "இன்பம் விழையான்; இடும்பை இயல்பென்பான்;
          துன்பம் உறுதல் இலன்" (628)

          "இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள்
          துன்பம் உறுதல் இலன்” (629)

          "துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
          இன்பம் பயக்கும் வினை” (669)

          "இன்பக் கடல் மற்றுக் காமம்; அஃதடுங்கால்
          துன்பம் அதனிற் பெரிது’’ (1166) என்றெல்லாம்

துன்பத்துடன் தொடர்புபடுத்தி இன்பத்தை விளக்கினார். துன்பத்திற்குரிய பிற சொற்களாகிய 'இடும்பை' (628) 'இன்னாமை' (630) என்பவற்றையும் உடனமைத்துக் காட்டினார்.

இவ்வாறு இன்பத்தோடு துன்பத்தை இணைப்பதும் இன்பம் பல்வகை உணர்வுகளால் எழுவதும் எனும் கருத்துக்களைக் கருத்தில் நிறுத்தி இக்கால அறிவியலுக்கு வருவோம்.