பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அப்பெருமகனார்பால் அடியேன் கொண்டிருக்கும் பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் அறிகுறியாய் இந்தப் பனுவலை அவருக்கு அன்புப் படையலாக்கிப் பெருமிதம் கொள்கின்றேன். முத்தியுலகில் இருக்கும் அவருடைய ஆன்மா அடியேனுக்குத் தொடர்த்து ஆசி கூறிக்கொண்டிருக்கும் என்பது அடியேனின் அதிராத நம்பிக்கை.

நூல் அச்சாகும்போது, மூலப்படியுடன் பார்வைப்படியை ஒப்பிட்டு நோக்கி உதவிய என் அபிமான புத்திரி டாக்டர் மு. ப. சியாமளாவுக்கு என் ஆசியுடன் கூடிய நன்றி.


இந்த நூலை உருவாக்கி வெளியிட என் இதய கமலத்தில் நிரந்தரமாய் அந்தர்யாமியாய் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் ஏழுமலையானின் இணைத்தாமரை அடிகளை வாழ்த்தி வணங்கி அமைகின்றேன்.

“புல்லும் பசுவிற்காம்; பூண்டும் மருந்திற்காம்;
கல்லும் திருக்கோயில் கட்டுதற்காம் - தொல்லுலகில்
ஏழை எளியேன் எதற்காவேன்? செந்திநகர்
வாழும் வடிவேல வா!”
                                                            – தேசிகவிநாயகம் பிள்ளை


‘வேங்கடம்’  – ந. சுப்பு ரெட்டியார்
AD-13, அண்ணா நகர்,
சென்னை - 40.
9-03-2001
தொ. பே. 6211583

 

2. தே.வி. மலரும் மாலையும் - முருகன் புகழ்மாலை - 1. அடியேனுக்கு எல்லாக் கடவுளரின் வடிவங்களும் பரப்பிரம்மமாகவே (பெரிய பொருளாகவே) காட்சியளிக்கும்.