பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


யுள்ள அப் பூச்சி அந்நிலையில் அழிவதில்லை. ஒரு சிலந்திக்கு இச்செயல் கூடுமேல், தன் நிலையில் சிதைவின்றித் தான் உலகிற்கு முதற்காரணமாதல் எல்லாம் வல்ல இறைவனுக்கு அரிதாகுமோ?

"ஒரு சிலந்திக்கு உண்டான ஸ்வபாவம் சர்வசக்திக்குக் கூடாதொழியா திறே" 29

என்ற தத்துவத் திரய வாக்கியமும் ஈண்டு நோக்கி உன்னற்பாலது.

மகாகவி பாரதியாரும் இவ்வுலகப் படைப்பையும், அதில் ஆருயிர்கள் துய்ப்பதையும்,

"எத்தனை கோடி இன்பம் வைத்தாய் - எங்கள்
இறைவா! இறைவா! இறைவா!'

என்று எக்களிப்புடன் போற்றுகின்றார். இதனை,

"சித்தினை அசித்துடன்
இணைத்தாப் - அங்கு
சேரும்ஜம் பூதத்து
வியனுவ கமைத்தாய்
அத்தனை உவகமும்,
வண்ணக் களஞ்சியம்
ஆகப் பலப்பலதல்
அழகுகள் சமைத்தாய்”

என்று மேலும் விளக்கி உரைக்கின்றார். மேட்டுர் அணை, கிருஷ்ணராஜ சாகர், கல்லணை முதலானவை கட்டுவதற்குக் கல், சீமைக்காரை (Cement) முதலான பொருள்கள் (அசித்து). தேவை. வினையாற்றுவதற்குத் தொழிலாளர்கள், பொறியாளர்கள் (சித்து) தேவை. சித்து, அசித்து ஆகிய இரண்டையும் இணையச் செய்தவன் கட்புலனுக்குக் காணப்பெறாத - காணமுடியாத - இறைவன் - மேற்பார்வை பார்க்கும் பொறியாளன். இதில் பங்கு பெறுபவை நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற ஐம்பூதங்கள். இவற்றின் விளைவு புன்செய் நன்செய் ஆனது: நெல்வயல்கள், பழத்தோட்டங்கள் முதலியவை அடங்கிய வியன் உலகு காணும் நமக்கு வண்ணக் களஞ்சியமாய்த் தோற்றமளிக்கும். இந்த விளக்கம் கொண்டு பாடலை நோக்குக.


26. தத். ஈசுவரப் - 29