சமயம், தத்துவம்
91
இத்துணைப் பொருள்களையும் ஆருயிர்கள் உடல்களைப் பெற்று நுகருகின்றன: துய்க்கின்றன; அநுபவிக்கின்றன. அறம் பொருள், இன்பம் ஆகிய மூன்று செயல்களையும் புரிகின்றன. பிறவிப் பயனாய்ப் பெற வேண்டியது, முக்தி - வீடுபேறு. அதனை அடையும் உணர்வையும், அதனை அடையும் வழிகளையும் ஆருயிர்களுக்குக் காட்டுகின்றான், ஆண்டவன். இதனை,
- "முக்தியென் றொருநிலை
- சமைத்தாப் - அங்கு
- முழுதினையு முனரும்
- உணர்வு அமைத்தாய்
- பக்தி என்று ஒருநிலை
- வகுத்தாய் - எங்கள்
- பரமா!பரமா! பரமா!"27
உலகிலுள்ள சமயங்கள் : உலகில் எண்ணற்ற சமயங்கள் உள்ளன. பாரதியார் இவற்றை,
- "பூமியிலே கண்டம்ஐந்து, மதங்கள். கோடி!
- புத்தமதம், சமணமதம் பார்ஸி மார்க்கம்
- சாமியென யேசுமதம் போற்றும் மார்க்கம்
- சநாதனமாம் இந்துமதம் இஸ்லாம்! யூதம்
- நாமமுயர் சீனத்துத் 'தாவு' மார்க்கம்
- நல்ல'கன் பூசி' மதம் முதலாம் பார்மேல்
- யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே
- யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங் கொன்றே."28
என்ற பாடவில் குறிப்பிடுவார். நம் நோக்கம் இவற்றை யெல்லாம் விளக்குவதன்று. இவற்றுள் சிலவற்றை மட்டிலும் ஈண்டு விளக்கலாம் எனக் கருதுகின்றேன்.
27. பா.க : தோ.பா. - இறைவா! இறைவா! என்ற பாடலில் அமைத்துக் காட்டுவதில் முக்தி என்ற ஒரு நிலையையும் அமைத்துக் காட்டிய பேருத வியையும், அதனை அடைவதற்கான பக்தி என்ற வழியை வகுத்துக் காட்டிய அற்புதத்தையும் வியப்புடன் நினைத்து நன்றியுடன் போற்றுகின்றார், கவிஞர். 28. பாரதியார் - சுயசரிதை - 85