இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சமயம், தத்துவம்
143
என்ற பாடற்பகுதிகளில் ‘எல்லாம் சக்தி மயம்’ என்ற கருத்து தெளிவாவதைக் காணலாம்.
இதே கருத்தை வேறு மூன்று பாடல்களில் விரிவாய் விளக்குவர்.
“பரிதி என்னும் பொருளிடை ஏய்ந்தனை,
பரவும் வெய்ய கதிர்எனக் காய்ந்தனை;
கரிய மேகத் திரளெனச் செல்லுவை,
காலும் மின்னென வந்துயிர் கொல்லுவை;
சொரியும் நீரெனப் பல்லுயிர் போற்றுவை.
சூழும் வெள்ளம் என்உயிர் மாற்றுவை;
விரியும் நீள்கடல், என்ன நிறைந்தனை,
வெல்க காளி எனதம்மை வெல்கவே
வாயு வாகி வெளியை அளந்தனை,
வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை;
தேயு வாகி ஒளிஅருள் செய்குவை;
செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;”