144
அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்
பாயும் ஆயிரம் சக்திக ளாகியே
பாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை:
சாயும் பல்லுயிர் கொல்லுபவை நிற்பன
தம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை.
நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை:
நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை:
நிலத்தின் மீது மலையும் நதிகளும்
சாரும் காடும் கனைகளும் ஆயினை:
குலத்தில் எண்ணற்ற பூண்டு பயிரினம்
கூட்டி வைத்துப் பவநலந் துய்த்தனை:
புலத்தை யீட்டிங் குயிர்கள்செய் தாய், அன்னே!
போற்றி! போற்றி! நினதருள் போற்றியே!”71[1]
என்பவற்றில் இது விரிவாய் விளக்கப்படுதலைக் கண்டு மகிழலாம்.
‘எல்லாம் சக்திமயம்’ என்ற கருத்து பிறிதொரு கோணத்திலும் காட்டப்பெறுகின்றது:
“துன்ப மிலாத நிலையே சக்தி,
தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி;
அன்பு கனிந்த கனிவே சக்தி,
ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி;
இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி,
எண்ணத் திருக்கும் எரியே சக்தி;
முன்புநிற் கின்ற தொழிலே சக்தி,
முத்தி நிலையின் முடிவே சக்தி.”72[2]
இதனைத் தொடர்ந்து வரும் பாடல்களிலும் சக்தியின் பரிணாமம் பல்வேறு விதமாய்க் காட்சியளிக்கின்றது, முத்தாய்ப்பாய்.
“விழ்வு தடுக்கும் விறலே சக்தி,
விண்ணை அளக்கும் விரிவே! சக்தி;
ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி,
உள்ளத் தொளிரும் விளக்கே சக்தி”,73[3]