பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம், தத்துவம்

151



ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்கஅடைக் கும்போது உணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணியனே" (8.9 9.11.)

என்ற அப்பர் பெருமான் திருத்தாண்டகத் திருப்பாடலுடனும்,


"ஒண்மிதியில் புனல் உருவி ஒருகால் நிற்ப
ஒருகாலும் காமருசீர் அவுணன் உள்ளத்து
எண்மதியும் கடந்து,அண்டம் மீதுபோகி,
இருவிசும்பி னூடுபோய் எழுத்து, மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடி,
தாடகையின் புறத்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை
மலர்புரையும் திருவடியே வணங்கினேனே (திருநெடுத் 5)

என்ற திருமங்கையார் திருநெடுந்தாண்டகப் பாசுரத்துடனும் என் இன்றைய பொழிவை நிறைவு செய்கின்றேன்.

நன்றி.
அனைவருக்கும் வணக்கம்.