பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்




(1) அறிவியல் தோக்கில் இலக்கியம்

(2) அறிவியல் தோக்கில் சமயம், தத்துவம்

என்று அமைத்துக்கொண்டு முதற்பொழிவை இன்று நிகழ்த்துகின்றேன்.

நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலமாய்த் தமிழர்கள் நாகரிகத்தில் சிறப்புற்று விளங்கினர் என்பது வரலாற்து அறிஞர்கள் ஒப்புக்கொண்ட உண்மை. அறிவியற்கலைகள் அவர்களிடம் பயன்முறைக் கலைகளாய் மிளிர்ந்தன என்பதற்குப் பல்வேறு சான்றுகள் உள்ளன. இன்று மேனாட்டார் ‘சயன்ஸ்’ (Science) என்று குறிப்பதைத்தான் நாம் ‘அறிவியல்’ என்று வழங்குகின்றோம். ‘சயன்ஸ்’ என்னும் சொல் ‘அறிவு’ (knowledge) எனப் பொருள்படும் கிரேக்கச் சொல்வினின்றும் தோன்றியது. மனிதன் வாழும் சூழ்நிலை, சுற்றியுள்ள உலகம், பிற அண்டங்கள் முதலியவற்றின் தன்மைகளைத்தாம் அறிவியற் கலைகள் உணர்த்துகின்றன. பண்டைய தமிழர்கள் இன்று இருப்பன போன்ற அறிவியல் துறைகளைத் தனித்தனிக் கலைகளாய் வளர்த்து வைத்திருத்தனர் என்பதற்குத் தக்க சான்றுகள் இல்லாது போயினும், அவர்கள் அக்கலைகள் பற்றி ஒரளவு அறிந்திருந்தனர் என்பதற்கும், அவை அவரது வாழ்வில் பயன்முறை அறிவியல் துறைகளாய் (Applied Science) மிளிர்ந்தன என்பதற்கும் பல்வேறு இலக்கியச் சான்றுகள் உள்ளன. அவற்றினை இன்றைய பொழிவில் விளக்குவேன்.

பண்டைத் தமிழர்கள் வானநூல், உயிரியல், இயற்பியல், பொறியியல் முதலிய பல்வேறு துறைகளிலும் வல்லுநர்களாய்த் திகழ்ந்தனர் என்பதற்கு இலக்கியச் சான்றுகள் உள்ளன. என்ன காரணத்தாலோ அவர்கள் இன்றுள்ளன போல் அத்துறைகளைத் தனித்தனியாக வரையறை செய்து பாதுகாக்கவில்லை. ஒருகால் அவ்வாறு வரையறுத்து வைக்கப்பட்டிருந்து அவை அழிந்துபட்டிருக்கவும் கூடும். அது எங்ஙனமாயினும், அவர்கள் அத்துறை ஷகளில் வல்லுநர்களாய் இருந்தனர் என்பது மட்டிலும் உறுதி.

நாகரிகமடைந்த நாடுகள் எங்ஙணும், நாள். திங்கள், ஆண்டுகள் ஒரே மாதிரி கணக்கிடப்பெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் பகல் முப்பது நாழிகை, இரவு முப்பது தாழிகை.