பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்


பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
அளந்துகொடை அறியா ஈகை
மணிவரை அன்ன மாஅ யோனே”13[1]

(ஆடு - மேடராசி; அழற்குட்டம் - கார்த்திகை; அரை இருள் -- பாதி இரவு, முடப்பனை - முடப்பனைபோலும் வடிவையுடைய அனுட நாளில்; வேர் முதலா - வெள்ளி முதலாக; கடைக்குளம் - புனர்பூசம்; கடைகாய - கடையில் வெள்ளி எல்லையாக; பங்குனி உயர் அழுவம் - பங்குனியின் முதற் பதினைந்தின்கண்; தலைநாண்மீன் - உத்தரம்; நிலைநாண்மீன் - மூலம்; தொல்நாண்மீன் - உத்திரத்துக்கு முன் சொல்லப் பெற்ற எட்டாம் மீன் - மிருகசீரிடம்; பாசி - கீழ்த்திசை; ஊசி - வடதிசை; அளக்கர் - கடல்; எரி - தீ; கால் - காற்று; ஒரு மீன் - வீழ்கொள்ளி; பொருநன் - வேந்தன்; அழிந்த - இரங்கிய; மைந்து - வலிமை; கால் பரிந்து - கால் துணிந்து; கலிமா - குதிரை; மேலோர் உலகம் - உம்பர் உலகம்; ஆயம் - மகளிர் கூட்டம்; நசைவர்க்கு - நச்சியோர்க்கு; ஈகை - வண்மை; மணிவரை - நீலமலை)

இந்தப் பாடலைச் சற்று மேலோட்டமாய் விளக்குதல் இன்றியமையாததாகின்றது. இப்பாடலில் அழல்சேர் குட்டம் என்பது கார்த்திகை நாள். “அக்கினியை அதிதேவதையாய் உடைமையின், கார்த்திகைக்கு அழல் என்பது பெயராயிற்று. ஆடு முதல் மீன் (மேடம் முதல் மீனம்) இறுதியாய் உள்ளவை பன்னிரண்டு இராசி. அசுவினி முதல் இரேவதி ஈறாயுள்ள நாள் (நட்சத்திரம்) இருபத்தேழு. இந்த இருபத்தேழு நட்சத்திரங்களையும் இராசி பன்னிரண்டற்கும் வகுத்து அளித்தால் முதல் இரண்டே கால் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் கால்பகுதி) நட்சத்திரம் ஆடாகிய மேடத்திற்கு உரியதாகின்றது. ஆதலின், கார்த்திகையின் முதல் கால் பகுதியை ‘ஆடியல் அழல் குட்டம்’ என்றார், கவிஞர். அனுடம் என்பது ஆறு மீன்களின் தொகுதி. அது வளைந்து பனைமரம் போல் அமைந்திருத்தலின் ‘முடப்பனை’ என்று அதனைக் குறித்தார். வேர் முதலா - அடியின் வெள்ளி; அஃதாவது, முதல் நாண்மீன். உயரழுவம் என்பது முதற்பதினைந்து நாள். தலைநாண்மீன் -


  1. 13 புறம் - 229