பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

13


 பூமியும் சந்திரனும் சேர்ந்து சூரியனைச் சுற்றுவதையும் சந்திரன் பூமியைச் சுற்றுவதையும் நான் ஓர் உவமையால் விளக்குவது வழக்கம். பெண் குழந்தையைப் பெற்றெடுத்த தாய் ஒருத்தி, நடக்கும் நிலையில் உள்ள தன் மகளுடன் ஓர் அரச மரத்துப் பிள்ளையாரைச் சுற்றி வருவதை உவமையாய்க் கொண்டு விளக்குவேன். அரசமரத்துப் பிள்ளையார், சூரியன்: பெண்மணி, பூமி; தாயின் முன்றானையைப் பிடித்துக்கொண்டு தாயைச் சுற்றி வரும் மகள் சந்திரன். இப்போது விளக்கம் முழுமையடைகின்றது அன்றோ?

நாள் என்ற கருத்தை வள்ளுவப்பெருந்தகை சுட்டுவதையும் ஈண்டுக் குறிப்பிட்டுச் செல்வேன்.

“நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.”[1]

(குறள் - 334)

என்பது வள்ளுவம். இதற்குப் பரிமேலழகர் கூறும் உரை அற்புதமானது.

“காலம் என்னும் அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன் முதலிய அளவைகளால் கூறுபட்டதாய் வழங்கப்படுவதல்லது தானாய்க் கூறுபடாமையின் ‘நாளென ஒன்றுபோல்’ என்றும், அது தன்னை ‘வாள்' என்று உணரமாட்டாதார் ‘தமக்குப் பொழுது போகாநின்றது’ என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின் ‘காட்டி’ என்றும், இடைவிடாது ஈர்தலான் ‘வாளின் வாயது’ என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியராகலின் ‘உணர்வார்ப்பெறின்’ என்றும் கூறினார். உயிரென்னும் சாதி ஒருமைப்பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது, ஈரப்படுவது அதுவேயாகலின், வாள் என்பது ஆகுபெயர். இனி இதனை நாள் என்பது ஒரு பொருள் போலத் தோன்றி உயிரை ஈர்வதொரு வாளாம் என்று உரைப்பாரும் உளர் (மணக்குடவர்). ‘என’ என்பது பெயரன்றி இடைச்சொல் ஆகலானும், ‘ஒன்று போல் காட்டி’ என்பதற்கு ஒருபொருட்சிறப்பு இன்மையானும், ‘அது’ என்பது


  1. 15 - நிலையாமை - 4