18
அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்
அனைத்தையும் படைப்பவனாகிய நான்முகன் தொல்லோன் - பழையோன் - ஆகின்றான்; படைக்கப்பட்டவற்றைக் காப்பவன். திருமால்: காக்கப்பெற்றவற்றைத் துடைப்பவன் உருத்திரன். இம்முத்தொழில்களில் கருத்தைச் செலுத்தாது உயர்ந்த நிலையில் இருப்பவன். பரமசிவம்.
மும்மூர்த்திகளும் மூன்று செயல்களைச் செய்கின்ற பொழுது அவர்கள் சீவர்களாகின்றனர். ஏனெனில், செயல் சீவகர்கட்கே உரியதாகின்றது. மேலும், மனத்தோடு கூடியிருப்பவர்கள் சீவர்கள். மனதற்ற நிலையில் சீவர்களது சீவபோதம் ஒழிகின்றது. சிவபோதத்தின் கழிவை முன்னிட்டே மும்மூர்த்திகளுக்கு அழிவு என்று சொல்லப்பெறுகின்றது. ஆனால், அம்மும்மூர்த்திகளிடமிருக்கின்ற ஆன்ம சைதன்யமோ அழிவதில்லை. ஆன்ம சைதன்யமே சுத்த சைதன்யம். அது "பரமசிவம்” எனப்படுகின்றது. அதுவே கருதாக் கருத்துடைக் கடவுள்.
இவ்விடத்தில் தாயுமான[1] அடிகளின் ’பொருள் வணக்கம்’ என்ற தலைப்பில் உள்ள பன்னிரண்டு பாடல்களுள் ஒன்றனை கண்டு சித்தித்தல் பொருத்தமாகின்றது
"அகர உயிர் எழுத்தனைத்தும் ஆகி, வேறாய்
- அமர்ந்தது.என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப்
பகர்வனஎல் லாம்ஆகி, அல்லது ஆகிப்
- பரம்ஆகிச் சொல்லரிய பான்மை ஆகித்
துகளறுசங் கற்பவிகற் பங்கள் எல்லாம்
- தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி
நிகர்இல்பசு பதியான பொருளை தாடி
- தெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்"
மேலும், அப்பர் பெருமானின்,
- ↑ தாயா 3 பொருள் வணக்கம்.