பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



ஊழியின் முடிவில் இந்த அகிலம் முழுவதும் அணுத்தத்துவமாய் மாறும் (Invołution) என்பதையும் மீண்டும, படைப்புக் காலத்தில் அஃது அண்டங்களாய் வடிவெடுக்கும் என்பதையும் மெய்யுணர்வு பெற்ற தாயுமான அடிகள்,

"செகத்தையெல்லாம் அணுவளவும்
சிதறா வண்ணம்
சேர்த்து அணுவில் வைப்பை:அணுத்
திரளை எல்லாம்
மகத்துவமாப்ட் பிரம்மாண்டம்
ஆகச் செய்யும்
வல்லவா நீநினைத்த
வாறே யெல்லாம்.30

என்று இரத்தினச் சுருக்கமாய் விளக்குவர்.

இந்த உண்மையினையே இன்றைய அறிவியலறிஞர்கள் புலன் உணர்வைப் பன்மடங்கு பெருக்கிக்காட்டும் கருவிகளைக் கொண்டு விளக்குகின்றனர். நாம் காணும் பொருள்கள் யாவும் அனுத்திரளைகளேயன்றி வேறொன்றும் அன்று என்பதை விளங்க உரைத்தனர். இதனையே திருச்சிற்றம்பலத்தில் ஆடும் ஆனந்தக்கூத்து விளக்குகின்றது. அணுவினுள்ளும் இந்த ஆனந்தக் கூத்தினையே நாம் காண்கின்றோம்.

இந்த ஆனந்தத் திருநடனத்தை அழகியதோர் உவமையாய் வைத்துக் கதிரவன் உதயம் செய்வதைக் கம்பன் காட்டுவான். கதையில் வரும் இடத்தைச் சுட்டி விளக்கினால்தான் இதில் தெளிவு பிறக்கும்; சுவையில் ஆழ்ந்து அநுபவிக்கவும் முடியும். விசுவாமித்திரனின் வேள்வி முடிகின்றது. இராமனுக்கு முகமன் கூறிய பின் மூவரும்,

"விசியும் வார்புனல் மருதஞ்சூழ்
மிதிலையர் கோமான்
புரியும் வேள்வியும் காண்டும்நாம்
எழுகென்று போனார்.” 31


30. தாயு. பாடல் : 40 தந்தைதாப் - 5 31. பாவ. வேள்விப் - 59