பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் இலக்கியம்

25



மணிவாசகப்பெருமான் விஞ்ஞானத்தையும் மெய்ஞ்ஞானத்தையும்,

“பூதங்கள் ஐந்தாகிப்
        புலனாகிப் பொருளாகிப்
பேதங்கள் அனைத்துமாய்ப்
        பேதமிலாப் பெருமையனைக்
கேதங்கள் கெடுத்தாண்ட
        கிளரொளியை மரகதத்தை
வேதங்கள் தொழுதேத்தும்
        விளங்குதில்லை கண்டேனே” 37[1]

(புலனாகி - தன்மாத்திரைகள் ஐந்துமாகி; கேதங்கள் - துன்பங்கள்)

என்ற ஒரு பாடலில் காண்கின்றார்.

இந்தத் திருக்கூத்தைச் சேக்கிழார் அடிகளும்,

“கற்பனை கடந்த சோதி
        கருணையே உருவ மாகி
அற்புதக் கோலம் நீடி
        அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோக மாகும்
        திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற
        பூங்கழல் போற்றி போற்றி.”38[2]

என்று கண்டு வழிபடுகின்றார்.

கம்பராமாயணத்தில் ஊர்தேடு படலத்தில் ஒரு பாடல்; மதிலின் ஒளியை அநுமன் கொண்டாடுவதாய் அமைந்துள்ளது. இதில் கதிரவன் மகர ரேகைக்குத் தெற்கே செல்லுவதில்லை என்பது மிகச் சமத்காரமாய்க் கூறப்பெற்றுள்ளது.

“முன்னம் யாவரும் இராவணன்
        முனியும் என்(று) அஞ்சி
பொன்னின் மாநகர் மீச்செலான்
        கதிர்எனப் புகல்வார்;


  1. 37. திருவாச. கண்டபத்து - 10.
  2. 38. பெரியபு. தில்லைவாழ் அந்தனர் - 2