பக்கம்:அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அறிவியல் நோக்கில் இலக்கியம், சமயம், தத்துவம்



இராம காதையில் ஒரு நிகழ்ச்சி - மூல பலம் இலங்கையில் வந்து திரளுகின்றது: எல்லாத் திக்குகளிலிருந்தும் எண்ணற்ற அரக்கர்கள் வந்து சேர்கின்றனர். வந்த சேனையின் அளவைக் கணக்கிட்டுக் கூறும்படி கேட்க, அதற்குத் தூதுவர், “இச்சேனையின் ஆயிரம் வெள்ளம் என உரைப்பர், பித்தர்; கணித நூலிலுள்ள உச்ச எண்ணே இதனை அளவிட்டு உரைத்தற்குச் சாலாது”71[1] என்று பதிலிறுக்கின்றனர். ‘வெள்ளம்’ என்ற அளவினை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். தொன்றுதொட்டு வழங்கிய தமிழ் எண்களையும், இடைக்காலத்தில் வந்து புகுந்த வடமொழி எண்களையும் பிங்கலந்தை என்ற நிகண்டு நூல் பின்வருமாறு வகைப்படுத்தித் தொகுத்துரைக்கின்றது.

“ஏகம் எண்மடங்கு கொண்டது கோடி”

“கோடி எண்மடங்கு கொண்டது சங்கம்”

“சங்கம் எண்மடங்கு கொண்டது விந்தம்”

“விந்தம் எண்மடங்கு கொண்டது குமுதம்”

“குமுதம் எண்மடங்கு கொண்டது பதுமம்”

“பதுமம் எண்மடங்கு கொண்டது நாடு”

“நாடு எண்மடங்கு கொண்டது சமுத்திரம்”

“சமுத்திரம் எண்மடங்கு கொண்டது வெள்ளம்”

இம்முறைப்படி நோக்கினால் எட்டாம் தானத்தது கோடி (10000000). பதினைந்தாம் தானத்தது சங்கம். இருபத்திரண்டாம் தானத்தது விந்தம். இருபத்தொன்பதாந்தானத்தது குமுதம் (ஆம்பல்). முப்பத்தாறாம் தானத்தது பதுமம் (தாமரை). நாற்பத்து மூன்றாம் தானத்தது நாடு (குவளை). ஐம்பதாம் தானத்தது சமுத்திரம் (நெய்தல்). ஐம்பத்தேழாம் தானத்தது வெள்ளம் என்பன புலனாகும். இதனை இக்காலக் கணக்குப்படி 10 + 7 + 7 + 7 + 7 + 7 + 7 + 7 = 10 என்று எழுதலாம். இந்தக் கணித எண்ணை மனத்தால் அறிந்து பார்ப்பது எளிதன்று. கணித உண்மை நம் சிந்தனையை எட்ட முடியவில்லை. ஆனால், இந்தச் சேனையின் அளவைக் கவிதை உண்மையால் காண்போம். மூலபலம் முழுவதும் ஏழரை நாழிகைக்குள் (மூன்று மணிக்குள் - 3 முகூர்த்த காலம்) அழிந்துபடுகின்றது. இதனைக் கம்பநாடன்.


  1. 71. கம்பராம, யுத்த படைக்காட்சி - 30.