இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52
காலம் என்பது, கடக்கும் கிகழ்ச்சிகளால் உருவான ஆறு, கட்டுக்கடங்கா வேகம் கொண்ட நீரோடை அது. ஒரு பொருள் கண்ணுக்குப் புலப்பட்ட உடனேயே, அது அடித்துச் செல்லப் படுகிறது. இன்னொன்று அதன் இடத்தில் வந்து, அதுவும் அடித்துச் செல்லப்படுகிறது.
—மார்க்கஸ் அரேலியஸ்
சிந்தனை, வாழ்வின் அடிமை;
வாழ்வு, காலத்தின் ஏமாளி;
உலகனைத்தும் அளக்கும் காலம்
ஒரு நேரம் நின்றுவிடும்.
—வில்லியம் ஷேக்ஸ்பியர்
வாழ்வின் காலம் குறுகியது; குறுகியதைப் புன்மையாய்க் கழிப்பது, கொடியதை நெடிய தாக்கிவிடும்.
—வில்லியம் ஷேக்ஸ்பியர்
கொடுங்கோலர்களில் தலையாயது, காலம். முதுமையை நோக்கி நாம் வளர்ந்து செல்கையில் நம் உடல் நலன், உடல் உறுப்புகள், புலன்கள், வலிமை, இயல்புகள், அனைத்தின் மீதும் வரி விதிக்கின்றார், அக் கொடுங்கோலர்.
—ஜான் ஃபாஸ்ட்டர்