பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றுதலில் மேற்கொள்ளும் சாதனங்கள்-11 ፪ S? காட்டுவதற்கு முன் : ஆசிரியர் ஃபிலிம்களே வகுப்பறையில் கையாள்வதற்கு முன்னர் அவற்றிலுள்ள செய்திகளே நன்கு அறிக் திருத்தல்வேண்டும். ஃபிலிம்களை முன்னதாகவே புரொஜெக்டரில் போட்டுப் பார்த்தால்தான் செய்திகளே கன்கு அறிந்துகொள்ள முடியும். எனவே, காட்டவேண்டிய சில நாட்களுக்கு முன்னரே ஃபிலிம்களே வாடகைக்கு வாங்கி இக்கருவியில் போட்டுப் பார்த்து ஃபிலிம்களின் எல்லாக் கூறுகளையும் நன்கு கவனிக்கவேண்டும். அவற்றைக் காட்டு வதற்கு ஆகும் காலம், அவை கற்பிக்க இருக்கும் பாடத்திற்குப் பொருந்தும் விதம் ஆகியவற்றை உறுதிசெய்து கொள்ளலாம். பல்வேறு வினுக்களேயும் ஆயத்தம் செய்து கொள்ளலாம். பிலிம் காட்டப்படுவதற்கு முன்னர் இவ்வினுக்களைக் கரும்பலகையில் எழுத வேண்டும். படம் பார்த்த பிறகு இவ்வினுக்களுக்கு விடைகள் தர வேண்டும் என்று முன்னரே அறிவித்துவிட்டால், மாளுக்கர்கள் படத் தைக் கவனத்துடன் பார்ப்பர். அவர்கள் பார்க்க இருக்கும் படம், படித்த பாடத்தைப்பற்றியது அல்லது படிக்க இருக்கும் பாடத்தைப் பற்றியது. என்பதையும் முன்னரே விளக்கினல் சாலப் பயன்தரும். இவ்வாறு பல்வேறு முறைகளில் மாளுக்கரின் மனத்தைப் பக்குவ கிலேக்குக் கொண்டு வந்த பிறகு படத்தைக் காட்டினுல், அவர்கள் ஆர்வத்தாலும் விடுப்பூக்கத்தாலும் உந்தப்பெற்றுப் படங்களே கல்ல முறையில் கவனிப்பர். அன்றியும், வகுப்பு கூடுவதற்கு முன் புரொஜெக்டர், ஃபிலிம்கள் முதலியவற்றை நன்கு சோதித்துத் தயாராக வைத்திருக்கவேண்டும். SAeMSMSAASAASAASAASAASAASAAAS காட்டும்பொழுது : ஒலிப்படமாக இருந்தால் ஆசிரியர் வாளா இருக்க வேண்டியதுதான். எல்லா விளக்கங்களும் படத்திலிருந்தே தரப்பெறும். ஒலியற்ற நிழற் படமாக இருந்தால், ஆசிரியரின் விமர்சனம் மிகவும் இன்றியமையாதது. கூர்மையான கோலினக் கொண்டு படத்திலுள்ள முக்கிய கூறுகளே மானுக்கர்களின் கவனத்திற். குக் கொண்டு வரலாம். மாணுக்கர்கள் உற்றுக் கவனித்தாலும் ஆசிரியர் உற்று நோக்கலை இன்றியமையாத பகுதிகளில் கொண்டு செலுத்தத்தான் வேண்டும் என்பதைத் தம் கருத்தில் இருத்துதல் வேண்டும். - - பெரும்பாலும் படங்களை ஒரு தடவை பார்த்தாலே போதும். ஒரு சில தொழில் நுணுக்கங்களே விளக்கக்கூடிய ஃபிலிம்களில் ஒன்றற்கு மேற்பட்ட தடவைகளில் பார்க்கும் இன்றியமையாமை, நேரிடலாம். முதல் தடவை பார்த்த பிறகு நடைபெறும் ஆராய்ச்சியால், ஒரு சில இன்றியமையாத செய்திகளைக் கவனியாமை, தவருண கருத்துகளேக் கொண்டமை முதலியவை புலகுைம். முதல் தடவை காட்டி, ஆராய்ச் சிக்குப் பிறகு அடுத்துவரும் நாட்களில் இரண்டாவது, மூன்ருவது தடவை காட்டலாம். இவ்வாறு பலமுறை பார்த்தபிறகு மாளுக்தர்