பக்கம்:அறிவியல் பயிற்றும் முறை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்திய (இரண்டாம்) பதிப்பு இன்றுஆக நாளையே ஆக இனிச்சிறிது கின்றுஆக கின் அருள்என் பாலதே கன்ருக கான் உன்னை அன்றிஇலேன் கண்டாய் , நாரணனே ! எேன்னை அன்றி இலை." - --திருமழிசையாழ்வார் பதின்மூன்ருண்டுகட்குப் பிறகு இந்நூல் வடவேங்கடத்து ஏழுமலே யான் திருவடிவாரத்திலிருந்து புதிய வடிவில் புதிய கோலத்துடன் பெருமித நடை போட்டுக்கொண்டு தமிழகத்தில் உலா வருகின்றது. நூலின் அடிப்படைக் கருத்துக்களில் அதிக மாற்றம் இல்லேயாயினும் சில இடங்களில் புதிய கருத்துக்கள் நுழைக்கப்பெற்றுள்ளன. கடை யிலும் அடிக்குறிப்புக்களிலும் நூல் திருத்தம் அடைந்துள்ளது. கலைச் சொற்களில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ்க் கலைக் களஞ்சியத்திலுள்ள கலைச்சொற்களும், சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் (திருநெல்வேலி) 1959-இல் வெளியிட்ட கலைச்சொற்களும், ஜி. ஆர். தாமோதரன் குழுவினரால் தொகுக்கப்பெற்றுத் தமிழக அரசினரால் வெளியிடப்பெற்றுள்ள (1962) கலைச் சொற்களும் இப் பதிப்பில் இடம் பெற்றுள்ளன. - திருத்திப் பெருக்கிய பதிப்பு வெளிவருவதற்கு என் முயற்சியை நிறைவேற்றி வைத்த பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலின்” திருவடிகளே நினேந்து போற்றுகின்றேன். எம்பெரு மான் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே' என்று குலசேகராழ்வார் விரும்பியவாறு தமிழ்நாட்டெல்லேயிலிருந்துகொண்டு தொடர்ந்து தமிழ்ப் பணியாற்றுவதற்கும், யான் எதிர்பாராத நலன்களையெல்லாம் எனக்கு நல்கி, என் உடல் நலத்தையும் மனவளத்தையும் வளர்த்துக் குன்ருது பாதுகாக்கும் குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்” திருவடிகளே வாழ்த்தி வணங்குகிறேன். - திருப்பதி, | மார்ச்சு 20, 1971 க. சுப்பு ரெட்டியார் 1. நான்முகன் திருவந்தாதி-7 2. மீனுட்சியம்மை பிள்ளைத் தீமிழ்-8 8. பெருமாள் திருமொழி 4 10 4 திருவாய்மொழி 8:3:8